Wednesday, December 22, 2010

தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் - நாத்திகன் தெரியாததை கடவுள் என்று கூறுபவன் - பக்தன் - கொளத்தூர் மணி உரை

பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சி நாத்திகர் விழா என்ற பெயரால் ஒரு மாநாட்டை கூட்டி நாத்திக கருத்துகளை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அல்லது ஏற்கனவே இருக்கிற கருத்துகளை மேலும் தூண்டி விடுவதற்கும் அதை துளிர்த்து விடுவதற்குமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றாலும் இதெல்லாம் ஏற்கனவே மக்களுக்கு தெளிவாக தெரிந்த செய்திகள் தான். மாணவப் பருவத்தில் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவியல் என்று ஊட்டப்படுகிறது. அறிவியல் பாடம் சொல்லி தந்த செய்திகள் அதிலே நிபுலா தியரி என்று சொல்லுகிறார்கள். பிக்பேங்க் தியரி என்று சொல்லுகிறார்கள். உலகம் எப்படி உண்டானது என்பதற்கு உலகம் கடவுளால் படைக்கப்பட்டது பொய் என்று அறிவியல் பாடம் சொல்லிவிட்டது மாணவப் பருவத்தில்.

டார்வின் தியரியை படிக்கிறார்கள் எப்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றது என்று. ஓர் அணு அமீபாவாக இருந்து மனிதனாக உரு மலர்ச்சிப் பெற்ற முழு வரலாற்றை டார்வின் தத்துவம் சொல்லி வருகிறது. ஆக மனிதன் படைக்கப்படவில்லை. மனிதன் உரு மலர்ந்தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல் பாடம் சொல்லி விடுகிறது. எல்லாம் கடவுள் படைக்கவில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல்பாடம் சொல்கிறது. ஆனால் அறிவியல் என்பது அறிவியல் அறிவாக உள்ளது. அறிவியல் மனப்பான்மையாக மாற வேண்டும் என்பதே நம் நோக்கம்.

அறிவியல் அறிவு - ளுஉநைவேகைiஉ முnடிறடநனபந மட்டும் போதாது அறிவியல் மனப்பான்மை - ளுஉநைவேகைiஉ ஆநவேயடவைல வேண்டும். அப்படி அறிவியல் மனப்பான்மை இருந்தால் தான் எதையும் அறிவியல் பார்வையில் அணுக முடியும் - ளுஉநைவேகைiஉ யயீயீசடியஉh. அறிவியல் அணுகுமுறை இருந்தால் தானாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் - ளுஉநைவேகைiஉ ஐnஎநவேiடிளே உருவாகும்.

அறிவியல் மனப்பான்மை இல்லாததால்தான் சரஸ்வதிக்கு வருடம் தவறாமல் பூஜை நடத்தியும் காகிதத்தை மிதித்தாலும் கண்ணில் ஒற்றிக் கும்பிடும் நமது நாடு தாழ்ந்து கிடக்க காகிதத்தில் மலம் துடைக்கும் ஐரோப்பியர்கள் மேலை நாட்டார்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.

அறிவியலை வயிற்றுக்காக படிப்பதற்கு மாறாக அறி வியலை மூளைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும் என்று கேட்பதும், அப்படி செயல்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்து அதற்கு துணையான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார்கள். அருமைத் தோழர்கள் அலகு குத்தி தொங்கிய வண்ணம் காட்டினார்கள். இராட்டின காவடி என்று அலகு குத்தி தோழர் சட்ட கல்லூரி மாணவர் பன்னீர்செல்வம், கோவை மாநகர செயலாளர்கோபால், பல்லடத்தைச் சேர்ந்த குமார் கூட அலகு குத்தி வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். உள்ளூர் தோழர்களைப் பார்த்தீர்கள்.

பல பேர் வந்தார்கள். காரணம் இதன் மூலம் செயல் விளக்கமாக செய்ய வேண்டும் என்பதும் கூடுதல் முயற்சி. இப்படிப்பட்ட செயல்களில் கடவுள் மறுப்பைப் பற்றி ஏன் கடவுள் இல்லை, எப்படி இல்லை என்று விளக்குகிறார்கள். முழக்கமிட்டபோது கூட சிலருக்கு வருத்தமாக இருந் திருக்கும். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கிறார்கள். பரப்பியவனை அயோக்கியன் என்கிறார்கள். வணங்கு கிறவனை காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள். வீதியில் போகிறவனை பார்த்து திட்டுவதுபோல அல்ல.

இதனால் வருத்தமுற்ற பக்தர்கள் பெரியாரிடமே எதிர்ப்பைக் காட்டினார்கள். சீர்காழியில் பெரியார் பேசவிருந்த மேடைக்கு முன்னால் பெரிய பலகையை வைத்தார்கள். கடவுளை கற்பித்தவன் புத்திசாலி. ஏன்னா நாம் முட்டாளுனு சொல்றோம்; கடவுளை பரப்பியவன் பண்பாளன். வணங்குகிறவன் வாழ்வான் என்று எழுதி வைத்தார்கள். பெரியார் வந்து பார்க்க வேண்டுமாம், எழுதி வைத்தார்கள்;பெரியார் பார்த்தார்.

கடவுளை கற்பித்தவன் புத்திசாலி என்று எழுதி வைத்திருக்கிறார்கள். நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்று சொல்லுகிறேன். இரண்டு பேருக்கும் சின்ன வேறுபாடுதான் இருக்கிறது. இரண்டு பேரும் கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள் கிறோம். அவன் முட்டாளா புத்திசாலியா என்பதே இப்ப சண்டை வேறு ஒன்றுமில்லை, என்றார் பெரியார்.

கடவுள் உண்மையாக இல்லை. இயற்கையாக இல்லை. பெரியார் மூன்று கேள்வி கேட்பார். கடவுள் சூயவரசந-ஆ,nஎநவேiடிn-, ஊசநயவiடிn-ஆ இதில் எது என்று கேட்டார். அதாவது கடவுள் இயல்பாக இருக்கிறதா, கண்டு பிடிக்கப்பட்டதா, உண்டாக்கப்பட்டதா, சொல்லு நீ.... நான் கடவுள் உண்டாக்கப்பட்டது, உண்டாக்கியவன் முட்டாள் தனமாக சரியான செய்திகளை சொல்லாமல் உண்டாக்கி வைத்து போய்விட்டான் என்று சொல்கிறேன். நீ உண்டாக்கியவன் புத்திசாலி என்று சொல்கிறாய். ஆனா இரண்டு பேரும் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம். கடவுள் இயற்கை அல்ல, உண்டாக்கப்பட்டது என்று பெரியார் சொன்னார். அதைப்போல உண்டாக்கப்பட்ட கடவுள் நம்முடைய அறியாமையை, ஏன்னா கடவுளுக்கு எது அடிப்படை என்றால் அறியாமையும் மலைப்பும்தான். அறியாமையே நமக்கு தெரியாத பொருளுக்கெல்லாம் கடவுள் என்று விளக்கம் சொல்கிறது.

5 ஆம் வகுப்பு மாணவனிடம் போய் 2-ம் 2-ம் எவ்வளவு என்றால் சொல்வான். 5-ம் 5-ம் எவ்வளவு என்றால் சொல்ல முடியும். இல்ல 5-ம் 5-ம் பெருக்கினால் எவ்வளவு என்றும் சொல்வான். அவனிடம் போய் 3284-ம் 8738-ம் எவ்வளவு என்றால்சொல்ல தெரியாது. அல்லது கொஞ்சம் நேரம் வேண்டும். அவன் தெரியவில்லை என்றால், ஆசிரியர் சரி அடுத்த முறை முயற்சி செய்து பார் என்று சொல்வார். கடவுள் என்று சொன்னால் ஆசிரியர் அனுமதிக்க மாட்டார். ஆனால்,சமுதாயம் அப்படிப்பட்ட போக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. எதெல்லாம் தெரியவில்லையோ அதையெல்லாம் கடவுள் என்கிறான். அணுவை பிளந்தால் புரோட்டான், நியூட்டான் அதுக்கப்புறம் தெரியலைனு நாம சொல்வோம். அவன் கடவுள் என்று சொல்வான். பக்தனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தான் இருக்கிறது.

அந்த கட்டடத்துக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது என்று சொல்கிறோம் போய் பார்த்தா தெரியப் போகுது. மலைக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது போய் பார்த்தால் தெரியும். நிலவில் என்ன இருக்கிறது அப்ப தெரியாது போய் பார்த்தோம் தெரிந்து விட்டது. அதற்கு மேல் போக போகத் தெரியும், தெரியாததை தெரியாது என்று சொல்பவன் நாத்திகன். தெரியாததை கடவுள் என்று சொல்பவன் ஆத்திகன் அவ்வளவுதான் வேறுபாடு. நாங்கள் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள் நாணயமாவது மிஞ்சும். நம்மை வேண்டுமானால் முட்டாள் தெரியாதவன் என்று அவன் சொல்லிவிட்டுப் போகட்டும். நாணயமானவன் என்று சமுதாயம் ஒத்துக் கொள்ளும்.

நீங்கள் சொல்லுகிற பதில், கடவுள் என்கிற பதில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளாது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். இப்படி பல பேரால் மறுக்கப்பட்டிருக்கிற கடவுளை, யார் யார் மறுத்தார்கள் என்றெல்லாம் காலையில் சொன்னார்கள். கடவுள் என்பது ஒன்று அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. வேண்டாம் என்று சொல்கிறோம். இன் னொன்று தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. கடவுள் நம்பிக்கையை விட்டு விடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் நாம் கடவுள் செய்யும் என நம்பிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறோம். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டுவிடுகிறோம்,தோல்வியில் முடிகிறது.

அங்கிருந்து இசுலாமியர்கள் படையெடுத்து வந்தபோது இங்கு நம்ம அரசருக்கு ராஜகுரு அறிவுரை சொன்னார். அரசன் வைணவத்தை சேர்ந்தவன். நீ ஒன்றும் செய்யாதே எல்லையில் கொண்டு போய் துளசியை விரித்து விட்டால் போதும் என்றார்கள். துளசி தழையை பூஜை செய்து போட்டால் முஸ்லீமின் குதிரை இந்தப் பக்கம் வராது என்று சொன்னான். துளசி இலைகளைக் கொண்டு போய் தூவி விட்டான் குதிரைகள் அவற்றை தின்னுட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டது. சண்டை போடாம ஆட்சியை புடிச்சிட்டு போயிட்டான்.

நம்ம தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் அப்படித்தான் போய்விட்டது. ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். இங்கிலாந்தில் ஆங்கிலேய தளபதி ஒருவன் இருந்தான். நெல்சன் என்று பெரிய கப்பல் படை தளபதி. புகழ் பெற்ற தளபதி அவன். தன் படை வீரர்களுக்கு சொன்னான் போருக்கு போகும் முன் சொன்னான், படை வீரர்களே கடவுளை நம்புங்கள், ஆனால் வெடிமருந்து நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பூசாரியே சம்பளம் அதிகம் வேண்டுமென்றால் அரசு கிட்டதான் கோரிக்கை வைக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு நிதி கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறான். ஓய்வூதியம் வேண்டும் என்று அரசைக் கேட்கிறான். கடவுள்கிட்ட ஒரு நாளும் கேட்டதில்லை. எல்லா பூசாரியும் சங்கம் வைத்து அரசுக்கிட்ட கோரிக்கை வைக்கிறான்.

கோயிலுக்கு அதிகமாக கூட்டம் போகிறது என்று சொன்னார்கள். பெரியார் எளிமையாக சொன்னார். அவர் எதையும் மிக எளிமையாக சொல்வார். கோயிலுக்கு கூட்டம் அதிகமாக போகிறதா? நான் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறேன். ஒரு நாளைக்கு ஆண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். ஒரு நாளைக்கு பெண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். அப்புறம் பார் கூட்டத்தை என்று சொன்னார். இதுதான் கடவுள் நம்பிக்கை என்பது. இந்த கடவுள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பது வெளிநாடுகளில் அறிவுக்கு மட்டும் எதிரானது. அறிவுக்கு மட்டும் எதிரானது என்பதால் அறையிலிருந்து அறிஞர்கள் எல்லாம் உட்கார்ந்து அறிவியல் சிக்கலாக பார்த்தார்கள்.

பெரியாரே சொல்வார் கடவுள் உண்டா இல்லையா என்பது,அறையில் உட்கார்ந்து அறிஞர்கள் சொல்ல வேண்டிய செய்தி. அரங்கில் வந்து மக்களிடம் பேச வேண்டிய செய்தி இல்லை. ஆனால் ஏன் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பெரியார் சில விளக்கங்களை சொல்வார். நிறைய பேர் கடவுள் இல்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். காலையில் எல்லாம் பேசினார்கள். நடிகர் கமலகாசன் கடவுள் இல்லை என்று சொல்லுவார். ஆனால், இடஒதுக்கீடு தப்பு என்கிறார். அவருக்கு கடவுள் இல்லை தான். இந்து ராம் கடவுள் இல்லை என்று சொல்லுகிற மார்க்சிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார். ஆனால் குற்றவாளியாக இருக்கிற இளைய சங்கராச் சாரியாரை அவர் தான் காரில் அழைத்துப் போய் காஞ்சிபுரத்தில் விடுகிறார்.

இவர்களையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த நாட்டிற்கு தீங்காய் வந்த இந்துத்துவா என்ற தத்துவத்தை தந்த சாவர்க்கர்,காந்தி கொலையில் குற்றவாளி. இந்துத்துவா என்ற பாசிச கருத்தை முதலில் விதைத்தவர். இந்த நோய்க்கெல்லாம் காரணமாக இருந்த சாவர்க்கர் ஒரு நாத்திகர். அவர் கடவுளை நம்பியவர் அல்ல. ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன். ஆரியன் உயர்ந்தவன் என்ற ஆணவ கருத்தும் ஆரியர் ஆட்சியில்தான் இந்தியா இருக்க வேண்டுமென்றும் அவர் விதைத்த நச்சு விதைகள் ஏற்படுத்தியிருக்கிற நாசங்களை நாம் அறிவோம். கடவுள் உண்டு இல்லை என்பதால் ஒன்றும் பெரிதாய் வந்து விடாது. இந்த கடவுள் நம்பிக்கையை ஏன் மறுக்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது பெரியாரின் தத்துவங்கள் அனைத்தும் என்பதால்தான். பெரியார் கடவுள் மறுப்பை எப்படி சொன்னார் என்றால், கடவுளை எப்படி மறுக்கிறார் என அவரே சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் குடி அரசில் ஒரு உரையாடலை எழுதி இருக்கிறார்.

நாத்திகனை கூப்பிட்டு ஒரு ஆத்திகன் கதை சொல் கிறான். கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை படைத்தார் என்று சொல்லுவான். அவர்தான் வெளிச்சத்தைக் கொடுத்தான் என்று சொல்லுவான். நாத்திகன் கேள்வி கேட்பான். அதற்கு முன் இருட்டாய் இருந்துச்சா. அப்படீன்னா இருட்டை எவன் உண்டாக்கினான்.இப்படி பல கேள்விகளை கேட்டார்.

இன்னொன்றும் சொன்னார் பக்தன் இரண்டை நம்புகிறான். கடவுளை நம்புகிறான், விதியை நம்புகிறான். பெரியார் கேட்டார், கொஞ்சம் பொறுமையாய் யோசி. கடவுள் என்பதை நம்பினால் விதியை மறந்துவிடு. விதி உண்மையாக இருந்தால் கடவுள் இல்லை. ஏனென்றால் என்னுடைய விதிப்படி நான் பிறந்தேன், வளர்ந்தேன், சாவேன் என்றால் இன்னைக்கு கீழே இறங்கி வண்டியில் போகையில் அந்த மூலையில் போய் விபத்து நேரிட்டு சாவதுதான் விதியாக இருந்தால், அப்புறம் எதற்கு கடவுளை கும்பிடனும். கும்பிட்டாலும் சாவேன். ஏன்னா விதி. அதுதான் என்ன பண்ணினாலும் சாவேன் என்றால், கடவுள் எதற்கு? அல்லது கடவுளை நம்பினால்,கடவுளை வணங்கினால், பிரார்த்தனை செய்தால், அதற்கு உண்டியலில் போட்டால், பூஜை செய்தால் அந்தவிதியை கடவுள் மாற்றிவிடும் என்றால் விதியை உண்மை என்று சொல்லாதே. இரண்டில் ஏதாவது ஒன்றை சொல் என்றார் பெரியார்.

(தொடரும்)

Saturday, November 27, 2010

கொளத்தூர் புலியூர்பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு வீடியோஸ்

வீடியோஸ் 1

http://acidthiyagu.blogspot.com

வீடியோஸ் 2

http://acidthiyagu.blogspot.com

வீடியோஸ் 3

http://acidthiyagu.blogspot.com

கொளத்தூர் புலியூர்பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு

கொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.2010 மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி அவர்கள், ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து பல்வேறு கட்சிகளை, இயக்கங்களை சார்ந்த தோழர்களும், தோழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் மற்றும் குழந்தைகளும் கையில் தீபம் ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினர்.

இறுதியில் தோழர் கொளத்தூர்மணி உரையில் "தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை ஏற்றிருந்தாலும் அதற்கு பெரும் காரணமான இந்த இந்திய அரசோடுதான் இன்னும் நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற கேவலமான உணர்வோடுதான் இந்த நிகழ்வில் நாம் கலந்துகொண்டுள்ளோம். ஒன்று அந்த அரசை அழுத்தம் கொடுத்து நம் பக்கம் திரும்பும் அளவுக்கு உணர்வுபட்டு எழுந்தாக வேண்டும் அல்லது இது எங்கள் அரசல்ல என்று பிரிந்தாக வேண்டும் என்ற உணர்வு எல்லோர் மத்தியிலும் வரும்விதத்தில் கடந்த போரில் இந்திய அரசின் பெரும் துரோகத்தை நாம் அறிவோம்.

மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முழு ஏற்பாடு செய்த பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர் பெ.இளஞ்செழியன் அவர்கள் இன்று நம்மோடு இல்லாமல் எதிர்பாராத விபத்தில் நாம் அவரை இழந்ததற்கு நம்முடைய இரங்களையும் தெரிவித்துகொள்கிறோம்" என்று கூறினார்.











படங்கள்: காவை பிரபு

வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோம் – மாவீரர் நாள் 2010 அறிக்கை – தலைமைச்செயலகம்,

November 27th, 2010 flashnews,

<span class=LTTE" title="LTTE" width="65" height="65">

இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் தமது மாவீரர் நாள் 2010 அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மாவீரர்நாள் அறிக்கை – 2010

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/10

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

நவம்பர் 27, 2010.

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களை அழிக்க வந்த எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி, தங்கள் உயிரையும் உடலையும் எமக்குக் காப்பரணாக்கிய உத்தமர்களின் நினைவுநாள்.

உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த வீரப் புதல்வர்களையே சாரும். அவர்களது உயிராலும் உதிரத்தாலுமே நாம் புதிய வரலாற்றைப் படைத்திருக்கின்றோம்.

அந்நிய வல்லாதிக்கச் சக்திகளோடு கைகோர்த்து எம்மண் மீது பெரும் படையெடுப்பைச் செய்த எதிரியின் முன்னால் மனவலிமையோடு போர்புரிந்த இந்த மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி, நெய்விளக்கேற்றி வழிபடும் இத்திருநாள், தமிழர்களின் எழுச்சி நாளாகும்.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின், இனத்தின், பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவே இவர்கள் போராடப் புறப்பட்டார்கள். எம் மண்மீதும் மக்கள்மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள இனவெறி அடக்குமுறைக்கெதிராகவே ஆயுதமேந்திப் போராடினார்கள்.

எமது தேசவிடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தினரும் என்றும் பெருமைக்குரியவர்களே.

இலங்கைத்தீவில் தமது இறைமையைப் பேணியபடி தம்மைத்தாமே ஆட்சி செய்துகொண்டிருந்த தமிழினம் படிப்படியாக மேற்குலக நாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் இறுதியில் இலங்கைத்தீவைக் கைவிட்டுச் சென்றபோது தமிழரின் அரசியல் உரிமைகளைச் சிங்களப் பெரும்பான்மையினத்திடம் நிரந்தரமாகக் கையளித்துச் சென்றார்கள்.

பிரித்தானியரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமிழினத்தின் மீதான கொடுமைகள் சிங்களப் பெரும்பான்மையினத்தால் இனவெறியோடு மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப்போன நிலையிலும், தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த நிலையிலும்தான் எமது மக்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்தார்கள்.

உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாகக் கொண்டு விடுதலைபெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமை எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர்.

ஆயினும் பல நாடுகள் தமது சொந்த, பிராந்திய அரசியல் – பொருளாதார நலன்களுக்காக எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் பாராமுகமாக இருந்தமை கவலைக்குரியது. சில வல்லரசுகள் இன்னும் ஒருபடி மேற்சென்று எமது போராட்டத்தை நசுக்கவும் அடியோடு அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் துணைபுரிந்து கொண்டிருப்பது நியாயமற்றது.

நீண்டகாலமாக பெரும்பான்மையினத்தின் அனைத்துவித அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தமது விடுதலைக்காக வீறுடன் போராடிக்கொண்டிருந்த ஓரினத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கவென நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையில் சிலநாடுகள் அணிதிரண்டு உதவியளித்தபோது, மனித உரிமைகளைப்பற்றி பெரிதாகப் பேசிக்கொண்டிருந்த நாடுகளும்கூட கண்டுகொள்ளாமல் இருந்தமை தமிழ்மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகவே உள்ளது.

உலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும் சரி, அதன்பின்னரும் சரி, உலகம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்கவில்லையென்பது தமிழ்மக்களை வேதனையின் விளிம்பில் கொண்டுபோய் விட்டுள்ளது.

போரில் வெற்றிபெற்றதாக மமதையோடு அறிவித்த சிங்களப் பேரினவாத அரசு அதன்பின்னர் நடந்துகொண்ட, நடந்துகொள்ளும் முறையும் மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது. தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எமது மக்கள் தமது உயிரினும் மேலாக மதித்துப் பூசித்துவந்த மாவீரர் துயிலுமில்லங்களை முற்றாக அழித்து, அவை இருந்த இடமே தெரியாத வண்ணம் மாற்றியமைத்துள்ளது. தமிழர் பகுதிகளில் எஞ்சியுள்ள பண்டைய வரலாற்றுச் சின்னங்களையும் தேடித்தேடி அழித்தும் வருகின்றது.

தமிழர் தாயகத்தில் புதிது புதிதாக முளைத்துவரும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் எமது தேசிய அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் மறைமுக நடவடிக்கையே. இவை தனியே மத அடையாளங்கள் என்பதையும் தாண்டி எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நோக்கோடு ஆண்டாண்டு காலமாக சிங்கள – பெளத்த பேரினவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த சதித்திட்டங்களே. எமது விடுதலை இயக்கம் தாயகத்தில் பலம்பெற்றிருந்தபோது முடக்கப்பட்டிருந்த இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு தற்போது தீவிரமாக எமது தாயகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அத்தோடு, புதிய தொல்பொருள் ஆய்வுகளும், வரலாற்று ஆய்வுகளும் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டுப் புனையப்படுகின்றன. தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று நிறுவும் நோக்குடன் அப்பட்டமான வரலாற்றுத் திரிப்புக்களையும் புனைகதைகளையும் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விடத் தொடங்கியுள்ளது. தொல்பொருள் ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு நடாத்தப்படும் வரலாற்றுத் திரிப்புகளும், தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும், தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கும் நிர்வாக மாற்றங்களுமென சிங்களப் பேரினவாதம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் சகலவிதமான சதித்திட்டங்களையும் வழிமுறைகளையும் சிங்கள அரசு கைக்கொள்கிறது.

புனர்வாழ்வு, அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா அரசு நிகழ்த்திக்கொண்டிருப்பது நிலஆக்கிரமிப்பே தவிர தமிழ்மக்களுக்கான நிம்மதியான வாழ்வாதாரமன்று. ஆங்காங்கே சிங்களக் குடியிருப்புக்களும் படைக் குடியிருப்புக்களும் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்மக்களுக்கான அபிவிருத்தியல்ல. அபிவிருத்தியென்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பை ஒருபுறம் நிகழ்த்திக்கொண்டு, தமிழரின் இனப்பரம்பலைச் சிதைத்து இலங்கைத்தீவை முழுமையான ஒரு சிங்கள – பெளத்த நாடாக்கும் கைங்கரியத்தைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது சிங்களப் பேரினவாத அரசு.

தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்மக்கள் மீதான தனது இரும்புப்பிடியைப் பலவழிகளிலும் அது இறுக்கி வருகின்றது. தமிழரின் அரசியல் அபிலாசைகள் எவற்றையும் பொருட்படுத்தாது தான் நினைத்ததை மட்டுமே நடைமுறைப்படுத்துவதோடு, தமிழரின் மீது தனது விருப்புக்களைத் திணித்துக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

தமிழரின் தாயக நிலப்பரப்பு முழுவதையும் சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற படையதிகாரிகளை தமிழ்மக்களின் தாயகப்பகுதி எங்கணுமுள்ள மக்கள் நிர்வாகக் கட்டமைப்புக்களுக்கு அதிகாரிகளாகவும், மாகாணங்களின் ஆளுநர்களாகவும் அமர்த்தியுள்ளது. இந்தப் படையதிகாரிகள்தான் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்மக்கள் மீதான போரின்போது அனைத்து மனித உரிமைகளையும் மீறி தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்று குவித்தவர்கள். போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள் எழுப்பிய எதிர்ப்புக்குரல்கள் எவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதையே சிறிலங்கா அரசின் இச்செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக்குழு எமது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது. போர்க்குற்ற விசாரணையின் ஊடாக எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிக்கொண்டு வரப்படுவதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதும், எமது இனத்தின் விடுதலைக்கான அங்கீகாரத்தை உலகமட்டத்தில் பெற அது உதவ வேண்டுமென்பதும் எமது மக்களின் அவாவாகும்.

சிங்களப் பேரினவாத அரசு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு அவற்றை மூர்க்கத்தனமாக எதிர்த்தும் வருகின்றது. கூடவே, மனித உரிமை அமைப்புக்களினது வேண்டுகோளையும் கரிசனைகளையும் உதாசீனப்படுத்துகிறது. சுயாதீனமான விசாரணையொன்று நடைபெறுவதை எப்பாடு பட்டாவது தடுத்து விடுவதில் சிறிலங்கா அரசு குறியாகவே இருக்கின்றது.

இவ்வாறு ஒருபக்கம் சுயாதீனமான பன்னாட்டு விசாரணை முயற்சிகளை நிராகரித்துக் கொண்டு, கண்துடைப்புக்காக தானே ஒரு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இப்படியான விசாரணைக்குழுக்கள் தொடர்பில் தமிழர்களுக்கு மிக நீண்டகால அனுபவமுண்டு. அவ்வகையிலேயே சிறிலங்கா அரசு அமைத்திருக்கும் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு” என்ற நாடகமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சியில் உலகநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் வீழ்ந்து விடாமலிருக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் வேண்டுகோளாகும்.

எமது விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் போர்நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளோம். சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுத்துள்ளோம். இக்காலகட்டத்தில், எதிரி மேற்கொள்ளும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொண்டும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுக்களுக்குச் சென்றுள்ளோம். அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் உலகநாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எப்போதும் நாம் மதிப்பளித்தே வந்துள்ளோம். அவ்வகையில் 2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையிலான சமாதான ஏற்பாட்டாளர்களின் துணையோடு சிறிலங்கா அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டோம்.

சிங்களப் பேரினவாத அரசாங்கங்களோடு தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பல உடன்படிக்கைகள் காலத்துக்குக் காலம் சிங்கள அரசாங்கங்களால் தூக்கி வீசப்பட்டன. தமிழர்களாகிய நாம் எப்போதுமே எந்த உடன்படிக்கையிலிருந்தும் நாமாக விலகிக் கொண்டதில்லை. அதேபோலவே 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்தும் இறுதிவரை வெளியேறாமலே இருந்தோம்.

ஆனால் மகிந்த இராஜபக்ச அரசு அவ்வுடன்படிக்கையைக் கிழித்தெறிந்து, நோர்வேயின் நடுநிலைமையையும் அசட்டை செய்து, தமிழர் தாயகமெங்கும் பெரும்போரை நடாத்தி மாபெரும் மானுட அழிவைத் தமிழர்மேல் கட்டவிழ்த்து விட்டது. தமிழர் தேசத்தில் தமிழர்களை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்பவர்களைப் போலவே இப்போது நடாத்தி வருகின்றது. மகிந்த இராஜபக்ச அரசானது நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நடுநிலைத் தன்மையைக் கேலிக்குரியதாக்கி இருக்கின்றது.

தேசிய இனங்களின் விடுதலையென்பது பன்னாட்டு ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டதென்பதை நாம் நன்கு அறிவோம். பன்னாட்டு ஒழுங்குவிதிகளை மதித்தே நாம் எமது விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். உலக நாடுகளினது ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தே வந்துள்ளோம்.

எமது போராளிகள் பன்னாட்டு மனிதாபிமான ஏற்பாட்டாளர்களின் வாக்குறுதிகளை ஏற்று மேற்கொண்ட முயற்சிகள் சிங்கள அரசால் கொடூரமான முறையில் எதிர்கொள்ளப்பட்டன. எமது போராளிகள் பலர் உலக நியதிக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டதோடு, ஏனையவர்கள் இன்றும் சிறைக்கூடங்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாகக் காணாமற் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், காணாமற்போவதும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது.

எமது அன்புக்குரிய தமிழ்பேசும் மக்களே,

எமது விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் காலத்துக்கேற்ப, உலக ஒழுங்குகளுக்கு அமைய, மாற்றங்களைச் செய்து, அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

தங்கள் பூர்வீக நிலத்தில் இறைமையோடு வாழ்ந்த ஒரு தேசிய இனம் அழிக்கப்படும்போது, தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ளப் போராடுவது பயங்கரவாதம் ஆகாது. எங்களின் விடுதலைப் பயணத்தில் உலகநாடுகள் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல், எமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டதை வேதனையோடு பார்க்கின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக, எமது மக்களது அரசியல் முன்னெடுப்புக்களை நாம் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு உலகநாடுகள் எம்மைப் புரிந்துகொண்டு நீதியான, நியாயமான முறையில் வழிவிட வேண்டுமென்று அன்போடு வேண்டி நிற்கின்றோம்.

இந்திய தேசத்தின் மீது ஆழ்ந்த பற்றுதல் காலங்காலமாக தமிழ் மக்களுக்குண்டு. எமது விடுதலைப் போராட்டமும் இதற்கு எந்தவகையிலும் எதிரானதன்று. எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இந்தியாவின் தேசிய நலனோடு பின்னிப் பிணைந்துள்ளன.

எமது ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவும், சிங்கள அரசின் படை மேலாதிக்கமும், தமிழர் தேசத்தில் அமைக்கப்படுகின்ற பெரும் சிங்களப் படைத்தளங்களும், அத்தளங்களை அமைக்க உதவி புரியும் நாடுகளின் கபடத்தனமும் இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன. இந்தியாவோடு எம்மக்களுக்கு இருந்த உறவு சிங்கள ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனையில் சிறுகச்சிறுக சிதைவடைந்து போகாமலிருப்பதை இந்தியாவே உறுதிசெய்ய வேண்டும்.

எமது மக்களின் அவலங்களைப் பார்த்து துடியாய்த் துடித்த தமிழக உறவுகளின் உணர்வும், எமக்கு ஆதரவாக அவர்கள் நடாத்திய போராட்டங்களும் எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டியுள்ளன. கடல் எம்மைப் பிரித்தாலும், மொழியால், உணர்வால் நாம் தனித்தவர்களில்லை என்பதை தமிழ்நாட்டு எழுச்சிப் போராட்டங்கள் எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. இப்போராட்டங்களின்போது தம்மையே எரித்து, தம்முயிரை ஈகம் செய்த வீரமறவர்களையும் இந்நாளில் நினைவு கூறுகின்றோம்.

மேலும், சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் இனப்படுகொலையைக் கண்டித்து எமக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடாத்திய தமிழ்பேசும் ஏனைய நாட்டவரையும், அத்தோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையைப் புரிந்துகொண்டு எமது மக்களோடு இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்த ஏனைய இனத்தவரின் மனிதநேயத்தையும் மதிப்போடு நினைவு கொள்கின்றோம்.

எமது அன்புக்குரிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே,

தாயக மண்ணில் எமது மக்கள் சிங்களப் படையினரின் திறந்தவெளிச் சிறைக்குள்ளேயே வாழ்கின்றார்கள். இந்நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும்பளுவை இப்போது நீங்களே சுமக்க வேண்டியுள்ளது. பேரவலத்தைச் சந்தித்து நிற்கும் எமது தாயகத்து உறவுகளின் துயரத்தைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பெரும் பொறுப்பும் உங்களிடமே உள்ளது.

நாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை உலகநாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தமிழ்மக்கள் வாழ்கின்ற நாடுகளில் எமது விடுதலைப் போராட்டத்தைக் கட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு இளம் சந்ததியினரின் கைகளிலும் தங்கியுள்ளது.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத முகத்தை உலகின் கண்முன் வெளிப்படுத்தி சாத்தியமான வழிகளில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒன்றித்து ஒற்றுமையோடும் தேசிய உணர்வோடும் உலகத் தமிழர்கள் போராட வேண்டுமென்பதே எமது அவாவாகும்.

எமது அன்புக்குரிய உலகத்தமிழ் உறவுகளே,

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. எம்மினத்தை அடக்கி ஒடுக்கி, இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள – பெளத்த நாடாக்க வேண்டுமென்று தீவிரமாய்ச் செயற்படுகின்றது. சிறிலங்கா அரசானது தமிழரின் அரசியல் வேட்கையை முழுமையாக அழித்து, தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தமிழர்களின் அரசியல் உரிமையை சிதறடிக்கக்கூடிய திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. போர் ஓய்ந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நிலையிலும்கூட தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. அடக்குமுறையென்ற ஒரேயொரு தீர்வை மட்டுமே சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட இப்போதுதான் மேலும் வலுவடைந்துள்ளது.

அன்பான தமிழீழ மக்களே,

எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் சாவுகளையும், அழிவுகளையும், இடைவிடாத துன்பங்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை.

எமது மாவீர்களின் கல்லறைகளை இரும்புக்கரம் கொண்டு இடித்தழித்து அவர்களின் வரலாற்றை அழித்துவிட முடியாது. ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்தினுள்ளும் மாவீரர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

மாவீரர்கள் சத்திய வேள்விக்காய் தம்மை ஆகுதியாக்கியவர்கள். இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகள். அவர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

பெரியார் திராவிடர் கழக தோழர். பெ.இளஞ்செழியன் மரணம்

பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர். பெ.இளஞ்செழியன் 24.11.10 மாலை 7.00 மணியளவில் வாகன விபத்தில் மரணமடைந்தார். கழக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கழகம் இதுவரை நடத்திய ஆர்ப்பட்டம், போராட்டம் அனைத்திலும் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார்.
ஒவ்வொரு விழாக்காலங்களிலும் தகுந்த துண்டரிக்கை விநியோகித்து பெரியாரிலை மக்களிடையே பரப்பியவர்.சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் அதிகரித்த காலங்களில் தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். 25.11.10 காலை 10.00 மணியளவில் எவ்வித சடங்கும் சம்பிரதாயமும் இன்றி இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
கழக தோழர்கள் வீரவணக்கம் வீரவணக்கம் எங்கள் தோழர் செழியனுக்கு வீரவணக்கம் என முழங்க உடல் எரியூட்டப்பட்டது, மதியம் 1.00 மணிக்கு மறைந்த தோழரின் படத்தை அவரின் அத்தை திறந்து வைக்க தோழர்கள் முல்லைவேந்தன், டைகர் பாலன், செல்வேந்திரன், நங்கவள்ளி அன்பு, மேட்டூர் பாலு ஆகியோர் இரங்கள் உரையாற்றினர்.

Monday, October 4, 2010

3000 பெரியார் தி.க இளைஞர்கள் கைது / தங்களை அவசியம் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தி நடுரோட்டில் மறிய

தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புபிரிவின் திருச்சி அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது.

குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 இளைஞர்கள் கைதாயினர். திருச்சி வேர் அவுஸ் கிறிஸ்தவக் கல்லறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருச்சி பழையகோவில் பங்குக்கு உட்பட்ட பகுதிகளான உப்புப்பாறை, செங்குளம் காலனி, சத்தியமுர்த்தி நகர் பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாயினர்.

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் தோழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகி உள்ளனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபம், சௌடீஸ்வரி மண்டபம், பீமநகர் பாலாஜி மண்டபம், கே.கே. நகர் காவல்துறை சமுதாயக்கூடம் ஆகிய மண்டபங்களில் கைதான தோழர்கள் அடைத்துவைக்கப்பட்டனர்.

மண்டபங்களில் இடம் இல்லாததால் திருச்சி நகரைத் தாண்டி தோழர்களை அழைத்துச்சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டது போலீஸ். கைது கிடையாது, வீட்டுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்பினர். தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் போராடியபிறகு புதிது புதிதாக மண்டபங்களை தேர்வுசெய்து அவற்றில் தோழர்களை அடைத்தனர்.

பீம நகர் பகுதியிலும் கருமண்டபம் பகுதியிலும் தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தி நடுரோட்டில் மறியல் செய்யத் தொடங்கிய பிறகே அனைவரையும் காவல்துறை கைது செய்தது. கைது எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட உளவுத்துறை அதிகாரிகள் பெரும் முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர். பிற செய்திகள் மீண்டும்..











Friday, September 24, 2010

திருச்சி கிறிஸ்தவக்கல்லறையின் தீண்டாமைச்சுவரை அகற்றுங்கள்! - பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியின் போர்க்குரல்

அக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள்



தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள். “மாநிலத்தின் அதிகாரத்திலுள்ள தீண்டாமை தடுப்புச் சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு திருப்பிவிட்டது தவறு” என்று, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் கூறுகிறார். எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த சமுதாயப் பிரச்சினையில் களம் இறங்கிப் போராட, சாதி தீண்டாமை எதிர்ப்பு கொள்கையில் உடன்பாடுடைய ஒவ்வொரு அமைப்பையும், ஒவ்வொரு தோழரையும், பெரியார் திராவிடர்க ழகம் அறைகூவி அழைக்கிறது!


‘அக்கிரகாரம்’ - ‘சேரி’களை உருவாக்கிய இராசஇராசன் ‘சூத்திர’ இழிவை நிலைநிறுத்தும் தஞ்சை பெரிய கோயில் அவமானச் சின்னங்களுக்கு அரசு விழாவா?

- வடநாட்டுப் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து

- தமிழர்களிடையே சாதிப் பிரிவுகளை உருவாக்கி மோதவிட்டு, குருதி ஆறு ஓடவிட்டு,

- கோயில்களில் வடமொழியை வழிபாட்டு மொழியாக்கி

- ‘அக்கிரகாரங்களையும்’, ‘சேரி’களையும் தனித்தனியே உருவாக்கி

- தேவதாசி முறையை அறிமுகப்படுத்தி

- தமிழர்களை பார்ப்பனியமாக்கிய

இராசஇராசசோழனுக்கும், இன்றைக்கும் சூத்திர இழிவை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தஞ்சை பிரகதீசுவரன் கோயிலுக்கும் விழா எடுத்து கொண்டாடி மகிழ்கிறது, கலைஞர் ஆட்சி! அவமானங்களுக்கு அரசு விழாவாம்!



பெரியாருடன் ஒரு பயணம்

Wednesday, September 22, 2010

ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா?

சகோதரிகளே! சகோதரர்களே!!

இன்றைய தினம் நாம் நீலாவதி - ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இடம் இல்லாததனால் மிக நெருக்க மாக இருக்கிறது. அநேகம் ஜனங்கள் கீழே நிற்கின்றனர். இம் மாதிரிக் கல்யா ணங்கள் நமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வனவாகவே இருக்கின்றன. அறிவு கொண்டு உண்மை நோக்கத்தோடு இவ்விருவரின் திருமணம் நடை பெறப் போகின்றது. திருமணம் நடந்த பிறகு நண்பர்கள் இரண்டொரு வார்த்தைகள் சொல்வார்கள். திருமணத்தை நடத்திக் கொள்ளு மாறு மண மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். (மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் மாலையிட்டு மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்)

இங்கு எல்லோரும் விஜயம் செய்து இப்பொழுது நடைபெற்ற திருமணத்திற்குச் சாட்சி அளித்தோம். அது நமது கடைமையுமாகும். இப் பொழுது நடைபெற்று வரும் மற்ற மணங்கள் எப்படி நடைபெறுகிற தென்றால், ஒரு பெண்ணையும் ஆணையும் பிடித்து இருவரின் சம்மத மில்லாமலேயே கட்டாயப்படுத்திச் செய்யப்படுகிறது. அந்தப் பெண்ணா னவள் கொஞ்சமும் சுதந்தரமற்று மாமன், மாமி, நாத்தி, கொழுந்தன், புருஷன் ஆகியவர்களுக்கு என்றும் அடிமையாகவே இருந்து வரவேண்டியவளா யிருக்கிறாள். “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்” என்று கூறிப் பெண்ணினுடைய வீரத்தையும், மனிதத் தன்மையும் அழிக்கப் பட்டிருக்கிறது. நளாயினி, சீதை, சந்திரமதி முதலியவர்களைப் போல இருக்க வேண்டுமென்று பெண்களுக்குச் சொல்லப்படுகிறது. சந்திரமதியைப் போல் இருக்கவேண்டுமென்றால், கடனுக்காக புருஷன் தன் மனைவியை விற்றுவிடலாமென்றுதான் அர்த்தம், புருஷன் தன் மனைவியை விற்பனை செய்ய உரிமையுள்ளவன் என்றால், இதை விடப் பெண்களுக்கு மரியாதை கெட்டதனம் வேறென்ன இருக்கிறது. சீதையைப் பற்றிய கதை ரொம்ப ஆபாசமானது. சீதை நிறை கர்ப்பமாய் இருக்கும் பொழுது காட்டுக்கு விரட்டப்பட்டாளென்றால், அது எவ்வளவு மூடத்தனம் என்பதை யோசித்துப் பாருங்கள். நளாயினி சரித்திரமும் ரொம்ப ஆபாசமானது. புருஷன் ரொம்பக் குஷ்டரோகி. அவன் தாசி வீட்டிற்குப் போக வேண்டு மென்று பிரியப் பட்டானாம். அவனைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் விட்டாளாம். இது எப்படி யிருக்கிறதென்றால் தாசி வீட்டிற்குப் போக லைசென்ஸ் கொடுப்பது போலிருக்கிறது. புருஷனைத் தாசி வீட்டில் கொண்டு போய் விடுவது தான் பெண்ணின் கற்பா என்று கேட்கிறேன். புருஷன் தாசி வீட்டிற்குப் போக வேண்டுமென்று கூறினால், அவனை வெளியில் தள்ளி கதவைச் சாத்துவதுதான் சுயமரியாதையுடையவளின் செயலாகும்.

ஒருவர்:- ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா? ஹிந்து மதக் கடவுள்கள் பல மனைவிகளையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை மணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.

திரு. இராமசாமி அவர்கள் பதில் கூறியதாவது:-

இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென் றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும், ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுயமரியாதை இயக்கத் தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல. தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சு விடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும். பகுத்தறிவிற்கு எது பொருத்த மாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனு டைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக் கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக் கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார். கல்யாணத்தை கத்தரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச் செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் இருக்கும்படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்.

குடி அரசு - சொற்பொழிவு - 12.10.1930

பிரபுதேவா-நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு / மறுமணம் தவறல்ல - பெரியார் முடிவு

( பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அழியட்டும் ஆண்மை மற்றும் திராவிடர் கழகம் வெளியிட்ட பெண் ஏன் அடிமையானாள்? நூல்களிலும் குடி அரசு இதழ்களிலும் வெளியான கட்டுரை )

திருச்சியில் இம்மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நீலாவதி- ராமசுப்பிரமணியம் திருமணத்தின் போது ஒரு கேள்வி பிறந்தது. அதாவது “ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?” என்று கூட்டத்தில் ஒருவர் எழுந்து கேட்டார். அதற்கு அப்போதே பதில் சொல்லப்பட்டதானாலும், இந்த விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவருக்குள்ளாகவே பலருக்கு அம்மாதிரி மறுமணம் செய்து கொள்வது தவறு என்கிற அபிப்பிராயமும், சந்தேகமும் இருப்பதாலும் பொது ஜனங்களிலும் பலர், “மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது சீர்திருத்தக் கொள்கைக்கு விரோதம்” என்று கருதுவதாலும், இதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை இவ்வாரம் தலையங்கமாக எழுதலாம் என்று கருதி தொடங்குகின்றோம்.

முதலாவது இந்தக் கேள்வியைப் பற்றிக் கவனிக்கும் முன்பு மணம் என்பது என்ன? என்பதை முதலில் விளக்கிக் கொள்ள வேண்டும். மணம் என்பதை நாம் மணமக்கள் சௌகரியத்திற்காக என்று செய்து கொள்ளப் படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்றுதான் கருதுகின்றோம். அதில் இருவர் களுடைய சுயேட்சையும் சேர்ந்தோ அல்லது தனித்தனியோ கட்டுப் படுத்தும் எவ்வித கொள்கைகளும் இருக்கக் கூடாது என்றும் கருதுகின் றோம். இம்மாதிரி கருதுவது சரியா, தப்பா என்று முடிவு செய்வதிலிருந்தே மேற்கண்ட கேள்விக்குச் சிறிது சமாதானமும் கிடைத்துவிடும்.

நிற்க, இன்று உலகத்தில் இயற்கை உணர்ச்சியிலும், அநுபவத்திலும் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையின் கீழும் மறுமணம் என்பது எங்காவது தடுக்கப்பட்டிருக்கின்றதா என்பதை நம்மால் அறியமுடியவில்லை. அது மாத்திரமல்லாமல் மண விஷயமாய் ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களிலும், எந்த மத விஷயமான கொள்கைகளிலும் மறுமணம் என்பது தடுக்கப்பட்டி ருப்பதாகவும் தெரியவில்லை. இந்து மதத்தில் அறுபதினாயிரம் பெண்கள் வரையிலும் மகமதிய மதத்தில் சுமார் 10 பெண்கள் வரையிலும், கிறிஸ்தவ மதத்தில் அளவு குறிப்பிடாமல் எவ்வளவு பெண்களை மணம் செய்து கொள்ள நேர்ந்தாலும் அதுவரையிலும் மணம் செய்து கொள்ள இடமிருக் கின்றது. இவற்றுள் கிறிஸ்து மதத்தில் மாத்திரம் திருமணத்தை ரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதாகவும், அந்தப்படி ரத்து செய்து கொள்வதிலும் இன்னின்ன நிபந்தனைகளின்படிதான் செய்து கொள்ளலாம் என்றும் காணப்படுகின்றது. அதாவது சமுதாய சம்மந்தமான ஒரு பந்தோபஸ்தை உத்தேசித்து மாத்திரமே அல்லாமல் கொள்கைக்காக அல்ல என்று புரியும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இவ்வளவுதான் மறுமண விஷயத்தில் மற்ற மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற் கும் உள்ள வித்தியாசம். எனவே ஒன்றுக்கொன்று நிபந்தனைகளிலும் திட்டங்களிலும் தான் வித்தியாசமே தவிர மற்றபடி மறுமணக்கொள்கையை மதங்களின் படி பார்த்தால் எந்த மதமும் ஆட்சேபித்திருப்பதாய் தெரிய வில்லை. அன்றியும் இந்து மதத்தில் கடவுள்களே பல மணங்கள் செய்து கொண்டதாகவும் மற்றும் வைப்பாட்டிகளை வைத்திருப்பதாகவும், மத ஆதாரங்களில் காணப்படுவதுடன் அக்கடவுள்களை அந்தப்படியே அதா வது பல மனைவிகள், வைப்பாட்டிகள் ஆகியவைகளுடன் பூசை உற்சவம் முதலியவைகள் செய்தும் வருகின்றார்கள். மகமதிய மதத்திலும் திரு. மகமது நபி அவர்களே பல மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புக் கொள்ளப்படு கின்றன. ஆகவே இதை மறுப்பவர்களோ இம்மாதிரி கடவுள்களையோ, திரு. நபிகளையோ குற்றம் சொல்லுகின்றவர்களோ ஒருக்காலும் தங்கள் மதத்தின் பேரால், மத சம்மந்தமான கட்டளைகளின் பேரால் மறுக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அந்தப்படி யாராவது ஒருவர் தன்னை இந்துவென்று சொல்லிக் கொண்டு இம்மாதிரி அதாவது ஒரு மனிதன் மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்பாரேயானால் அப்படிப்பட்டவரை நாம் மதத்தை விட தன்னு டைய பகுத்தறிவையோ அல்லது அநுபவ சவுகரியத்தையோ அல்லது வேரேதாவது ஒரு கொள் கையோ முக்கியமாகக் கருதிக் கொண்டு இம்மாதிரி கேள்வி கேட்க வந் திருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும்.

ஆகவே அக்கேள்விக்காரர் தன்னை இந்து என்று கருதிக் கொண்டு கேள்வி கேட்பதை விடப் பகுத்தறிவுக்காரர் என்றோ அநுபவக் கொள்கைக் காரர் என்றோ கருதிக் கொண்டு கேள்வி கேட்கிறார் என்று அறிந்தோ மானால் அது விஷயத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன் அவருக்கு நியாயம் மெய்ப்பிக்கும் விஷயத்தில் நமக்குச் சிறிதும் கஷ்டமில்லை என்றே எண்ணுகின்றோம்.

நிற்க, பொதுவாக ஒரு மனிதனுக்கு தன் முதல் பெண்சாதி (1) செத்துப் போன காலத்திலும், (2) மற்றொரு கணவனிடம் ஆசை கொண்டு வெளிப் பட்டு விட்ட காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளுவதை யாரும் குற்றம் சொல்லுவதில்லை. அதுபோலவே (3) தீராத கொடிய வியாதிக்காரியா யிருக் கும் காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளுவதை யாரும் ஆட்சேபனை செய்வதில்லை (4) பயித்தியகாரியாய் புத்தி சுவாதீன மில்லாமல் போய் விட்ட காலத்திலும் யாரும் ஆட்சேபனை செய்வதில்லை. ஆகவே பகுத்தறிவுக்காரரும் அனுபவக் கொள்கைக்காரர்களும் மேற்கண்ட முதலா வது தவிர மற்ற 3 சந்தர்ப்பங்களில் மனைவியிருக்க மறுமணம் செய்யப் படுவதை ஆட்சேபிக்க மாட்டார்கள். இனி ஐந்தாவது, ஆறாவது முதலிய வைகளாகப் பல விஷயங்களைக் கவனிப்போம். (5) மனைவி அறியாமை யாலோ, முரட்டுத்தனமான சுபாவத்தாலோ புருஷனை லட்சி யம் செய்யா மல் ஏறுமாறாய் நடந்து கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம். (6) புருஷன் பெண்ணின் மனத்திற்குத் திருப்திப்படாததாலோ அல்லது எந்தக் காரணத்தாலோ புருஷனிடம் பெண்ணுக்கு அன்பும் காதலும் இல்லாமல் வெறுப்பாயிருப்பதாக வைத்துக் கொள்வோம். (7) மேற்கண்ட குணங்களுடன் அடிக்கடி தாய் வீட்டுக்குப் போய் விடுவதாக வைத்துக் கொள்ளுவோம். (8) புருஷனுடைய கொள்கைக்கு நேர் மாற்றமான கொள் கையுடன் புருஷன் மனம் சதா சங்கடப்படும்படி பிடிவாதமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர் என்று வைத்துக் கொள்ளுவோம். (9) செல்வச் செருக்கால் புருஷனைப் பற்றிய லக்ஷியமோ கவலையோ இல்லாமல் நடந்து கொள்ளுகிறவள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவைகள் மாத்திரமல்லாமல் மற்றும் இது போன்ற குணங்கள் உள்ள மனைவியிடம் அகப்பட்டுக்கொண்ட கணவன் கதி யென்ன ஆவது? என்பதைக் கவனிக்க வேண்டியது கேள்வி கேட்பவர்கள்(அதாவது அனுபவ கொள்கைக்காரர்கள் என்பவர்களின்) முக்கியக் கடமையாகும். இவை தவிர புருஷனுக்கு 12 வய திலும் பெண்ணுக்கு 10 வயதிலும் மற்றும் மணமக்களுக்கு இதிலும் கீழான வயதிலும் பெற்றோர்களாலோ, மற்றோர்களாலோ திருமணம் செய்யப்பட்டி ருப்பதால் அவைகள் மணமக்கள் அனுசரிக்க வேண்டிய தர்மங்களுக்கு கட்டுப்பட்ட மணங்களாகுமா? அல்லது திருமணங்கள் செய்து வைத்தவர் கள் அநுசரிக்க வேண்டிய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவைகளாகுமா? என்ப தும் கேள்வி கேட்கின்றவர்கள் அதாவது பகுத்தறிவுகாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும். இந்தக் காரணங்கள் தவிர மற்றும் எது எப்படி இருந்தாலும் மனதுக்குப் பிடிக்கவில்லை, அன்புக்குச் சிறி தும் பாத்திரமில்லை, காதலுக் குச் சிறிதும் இஷ்டமில்லை, வாழ்க்கைத் திருப் திக்கும் இன்பத் திற்கும் சிறிதும் பயன்படவில்லை என்று மணமகன் முடிவு செய்து கொள்ளத் தகுந்த மணமகளாய் அமைந்து விட்டால் அப்போது மணமகளின் கடமை என்ன? என்பதை மதக்கட்டுப்பாட்டுக்காரரும், அநு பவக் கொள்கைக் காரரும், பகுத்தறிவுக்காரரும், பாமர பொது ஜனங்களும் சேர்ந்து கவனித்துப் பார்க்க வேண்டிய காரியமாகும்.

கடைசியாக இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, இவைகளைப் பற்றிய யோசனையே சிறிதுமின்றி மற்றொரு புறம் “எப்படி இருந்தாலும் பொருத்துக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் தான் வேண்டும், ஒருக் காலமும் மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்ளக்கூடாது” என்று ஒருவர் சொல்லுவாரானால் அப்படிச் சொல்லுகின்றவர் எந்தக் கொள்கை யின் மீது அல்லது என்ன அவசியத்தைக் கோரி அல்லது என்ன நியாயத்தை உத்தேசித்து எவ்வித அநுபவத்தை அனுசரித்து அல்லது எந்தப் பகுத்தறி வைக் கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள் அல்லது எதிர்பார்க்கின்றார்கள் என்பது விளக்கப்படவேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் அது கவனிக் கப்படத்தக்கதாகும். ஏனெனில் சாதாரணமாகப் பேசுவோமானால் வெகு சாதாரண பாமர மக்கள் என்பவர்களும் கூட இக்காலத்தில் ஒரு விஷ யத்தைப் பற்றிப் பேசும் போது அது “சுருதி, யுக்தி, அநுபவம் ஆகிய மூன் றிற்கும் பொருத்தமாயிருக்கின்றதா” என்று கேட்பது எங்கும் சகஜமா யிருப்பதைப் பார்க்கின்றோம். அன்றியும் அம்மூன்று வார்த்தைகளின் அமைப்பும் முதலில் குறிப்பிட்ட சுருதிப்படி (அதாவது நமக்கு முந்தி இருந்த அநுபவசாலிகளின் அபிப்பிராயங்கள் என்கின்ற முறையில் கவ னிக்க வேண்டும் என்கின்ற தத்துவம் கொண்ட தானாலும் அப்படிப்பட்ட அநுபவசாலிகளின் அபிப்பிராயம் எவ்வளவு) சரியானதென்று சொல்லப் பட்டாலும் கூட மற்றும் அவ்விஷயமானது யுக்திக்கு (அதாவது நமது பகுத்தறிவுக்கு)ம் ஒத்ததாயிருக்கின்றதாவென்று கவனிக்க வேண்டும் என் கின்ற தத்துவத்தையே கொண்டு யுக்தி என்பதை இரண்டாவதாக வைக்கப் பட்டிருக்கின்றதையும் பார்க்கின்றோம். அப்படி யும் அதாவது யுக்திக்கும் பொருத்தமானதாகயிருந்து விட்டதாகச் சொல்லப் படுவதானாலும் அது அநுபவத்திற்கு (அதாவது நடைமுறையில் கொண்டு செலுத்த ஏற்ற தாயிருக்கின்றதா? என்று கவனித்துப் பார்க்க வேண்டும் என்கிற தத்து வத்தை வைத்தே அநுபவம் என்பதை முடிவில் மூன்றாவதாக வைக்கப் பட்டிருக்கின்றது என்பது யாவருக்கும் விளங்கும். ஆகவே ஒரு மனிதன் “ஒரு மனைவி இருக்கும்போது மறுமணம் செய்து கொள்ளக் கூடாது” என்பது இந்த மேற்கண்ட மூன்று பரீட்சைகளில் எந்த பரீட்சைக்கு விரோத மானது என்று கேட்கின்றோம். நிற்க, திருமணத்தில் மணமகனுக்கு மண மகளை வாழ்க்கைத் துணையென்று கருதுகின்றோம். இன்னிலையில் மேலே ஆரம்பத்தில் சொல்லப்பட்ட 9 - வகையில் பட்ட குற்றமான குணங் கள் அமைந்த மணமகள் ஒரு மணமகனுக்கு அமையப்பட்டு விட்டால் அது வாழ்க்கைத்துணையா அல்லது வாழ்க்கைத் தொல்லையா என்பதை முதலில் கண்டிப்பாய்க் கவனிக்க வேண்டும். வேடிக்கையாக வெளியிலி ருந்து பேசுகின்றவர்களை உண்மையறியாமல் நிலையறியாமல் சிறிதும் பொறுப்பற்ற முறையில் பாமர மக்களின் ஞானமற்ற தன்மையை தங்க ளுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாய் குற்றம் சொல்லக் கருதிக் கொண்டு “மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா” என்று யார் வேண்டு மானாலும் பேசிவிடலாம். அதாவது “மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்வது அக்கிரமம், அயோக்கியத்தனம்” என்பதாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தப்படி செய்து கொண்டது தப்பா, அல்லது இந்தப் படி சொன்னது தப்பா என்பதையும் பகுத்தறிவைக் கொண்டாவது அநுபவத்தன்மையைக் கொண்டாவது இந்தப்படி பேசுகின்றோமா, நினைக் கின்றோமா- இவ் விஷயத்தில் நாம் பிரவேசிக்கின்றோமா என்று நினைத்துப் பார்த்தால் கடுகளவு அறிவுடையவனுக்கும் ஒருக்காலமும் உண்மை விளங்காமற் போகாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

கடைசியாக ஒன்று சொல்லுகின்றோம். ஒரு மனிதன் ஒரு விஷயம் தனக்கு இஷ்டமில்லை என்றோ அல்லது இஷ்டமாயிருக்கின்றதென்றோ இன்ன காரியம் செய்ய தனக்கு உரிமை இருக்க வேண்டுமென்றோ உரிமை இருக்கக்கூடாது என்றோ கருதுவதற்கு அருகதை உடையவன்தானா அல்லது மற்றவர்களா என்பதும் இம்மாதிரி விஷயங்களில் முடிவான அபிப்பிராயத்திற்கு வர அவனவனுக்கு உரிமை இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டியது உண்மையான விடுதலையும் சுதந்திரம் கோருகின்ற வர்களின் கடமையுமாகும்.

நிற்க, வாஸ்தவத்திலேயே அன்பும், காதலும் இல்லாத அல்லது தனக்கு ஏற்படாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி வாழ்வது? மக்களுடைய அன்புக்கும், காதலுக்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் தான் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணும் சேர்ந்து மணம் (வாழ்க்கை ஒப்பந்தம்) செய்து கொள்வதா? அல்லது மணம் செய்து கொண்டதற்காக என்று அன்பையும், காதலையும், இன்பத்தையும், திருப்தி யையும் தியாகம் செய்வதா? என்பதை ஜீவசுபாவமுடைய ஒவ்வொரு வரையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம். உலகில் உள்ள மூடப்பழக்கவழக்கங்களில், அர்த்தமற்ற கட்டுப்பாடுகளில் - சிக்கிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பது என்பது சுலபமான காரியமல்லவானாலும் அவ்விதக் கட்டுப்பாடுகளையும், கஷ்டங் களையும் ஒழிக்கவென்றே ஏற்பட்ட ஸ்தாபன நடவடிக்கைகளையே மூடப் பழக்க வழக்கப்படியும் குருட்டு நம்பிக்கைப்படியும் செய்யவில்லை என்று குற்றம் சொன்னால் சொல்லுபவர்களுக்கு அறிவு என்பது ஏதாவது இருக் கின்றதாவென்று தான் கருத வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இவ்வியக்கம் அதற்காகவே ஏற்பட்டிருக்கும்போது அதன் நடவடிக்கை கள் வேறு எப்படி இருக்க முடியும். ஆகையால் இவ்வித யுக்திக்கும் அனுபவத்திற் கும், மனித சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் விரோதமான கொள்கைகள் எதற்காக காப்பாற்றப்பட வேண்டும் என்னும் விஷயங்களை அன்பர்கள் நடுநிலையில் இருந்து நேர்வழியில் சிந்தித்துப் பார்ப்பார்களாக.

நிற்க, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளாகவே மறுமண விஷயத்தில் உள்ள அதிர்ப்தியைப் பற்றிச் சற்றுக் கவனிப்போம்.

சுயமரியாதை இயக்கத்தில் கலியாண ரத்து என்பதும் ஒரு திட்ட மாகும். அந்தப்படியே செங்கற்பட்டு மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு ஈரோடு மகாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டு மென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே மணம் செய்து கொண்ட மணமக்கள் அந்தப்படியே கணவன் மனைவியையோ, மனைவி, கணவனையோ கலியாண பந்தத்திலிருந்து நீக்கிவிட அல்லது நீங்கிக் கொள்ள உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது. இந்தப்படி ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கை அமுலில் கொண்டு வரச் சட்ட சம்பந்தமான இடையூறு யாருக்காவது எந்த மதத்திற்காவது இருக்குமானால் அதற்காக சட்டத்தை யுத்தேசித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா? அல்லது சட்டங் களைக் கவனிக்காமல் நியாயம் என்று தோன்றிய படி நடந்து கொள்ளுவதா? என்பதைக் கவனித்துப் பார்த்தால் அவர்களது அதிர்ப்திக்குச் சிறிதும் இடமிருக்காது என்றே கருதுகின்றோம்.

உதாரணமாக சுயமரியாதைக் கொள்கைப்படி செய்யப்படும் திரு மணங்களிலும் சில சட்டப்படி செல்லக் கூடாதவைகளாகயிருந்தாலுமிருக் கலாம். அதாவது:-

“மணமக்கள் இருவரும் வேறு வேறு ஜாதிகள்” என்று சொல்லப் படும் கலப்பு மணங்களும், மூடப் பழக்க வழக்கங்களும் அர்த்தமற்றதும் அவசியமற்றதுமான சடங்குகள் செய்யப்படாத சில திருமணங்களும் செல்லுபடியற்றதாகவானாலும் ஆகலாம் என்று சட்ட வல்லவர்கள் சொல்லு வதாகக் கேள்விப்படுகின்றோம். அப்படியிருந்தாலும் கொள்கையிலிருக் கும் அவாவை உத்தேசித்து சட்டத்தைக் கவனியாமலும், அதனால் ஏற்படக் கூடிய பலன்களை லட்சியம் செய்யாமலும், எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் மணம் செய்து கொள்ளுவதை நாம் பார்க்கின்றோம். ஆகவே மறுமண விஷயத்தில் முதல் “மனைவி”யை சட்டப்படி கலியாண ரத்து செய்ய முடி யாமல் போய்விட்டதால் “கல்யாண ரத்து செய்யாமல் மறுமணம் நடத்தப் பட்டது” என்று சொல்லப்படுவதை விட இம்மாதிரி திருமணங்களில் சுயமரியாதைக் காரர்களுக்கு கொள்கைப் பிசகோ நியாயப் பிசகோ இருப்ப தாக நமக்குத் தோன்றவில்லை.

தவிரவும், முதல் மனைவி மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும்போது கூட மறுமணம் செய்து கொள்ளப்படுவதையும் சுய மரியாதைக் கொள்கை ஆதரிக்கின்றது என்பதைப் பற்றியும் சற்று கவனிப் போம். மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்ன விதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத் திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமே யாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்; காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை. அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப் பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்ட தாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவர வர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும். முடிவாக ஒன்று சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம். அதாவது:-

இம்மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் ஒரேயடியாய் அடியோடு இடம் இல்லாமல் போக வேண்டுமானால், பொதுவாகப் பெண்கள் நிலைமை மாறியாக வேண்டும். ஏனெனில் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்படு வதற்குப் பெரிதும் அஸ்திவாரமாயிருக்கும் காரணமெல்லாம் “இப்படிச் செய்து விட்டால் முன் மணம் செய்து கொண்ட பெண்ணின் கதியென்ன ஆவது?” என்கின்ற கவலை கொண்டேதான் கேள்வி கேட்கப்படுகின்றது. எந்தெந்தக் காரணத்தால் புருஷனுக்குப் பெண் பிடிக்கவில்லையோ - ஒத்து வரவில்லையோ அந்தந்தக் காரணங்களால் பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காத போது இப்போது புருஷனுக்கு இருக்கவேண்டுமென்று சொல்லப் படும் சுதந்திரமும் சவுகரியமும் போல பெண்களுக்கும் ஏற்பட்டு விடுமா னால் பிறகு இந்த மாதிரியான அநுதாபமும் கவலையும் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட இடமேயிருக்காது என்பது தான். நம்மைப் பொருத்த வரை ஆண்களுக்குச் சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்ணுக்கும் பொருந்துமென்றும், அவர்களுக்கும் ஆண்களைப் போலவே ஏற்பட வேண்டுமென்றும் அம்மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டு மென்றும் அப்பொழுதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்பட்டதாகும் என்பதோடு உண்மையான திருப்திகரமான இன்பத்தையும் காதலையும் அடையமுடியுமென்றும் கருதுகின்றோம்.

குடி அரசு - தலையங்கம் - 12.10.1930

Monday, August 9, 2010

மரணத்தை வெல்வேன்!' - பேரறிவாளன் மடல்..

'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், .சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது.

பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே...


''மதிப்பிற்குரிய அம்மா/அய்யா!

வணக்கம்!

நான், அ.ஞா.பேரறிவாளன். ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதில் அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில், கடந்த 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான். துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு.

எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரி யாகவும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரி யாகவும் அங்கம் வகித்து 2005 மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு ஒரு பேட்டி வழங்கியுள்ளார். 31-7-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும்:

'ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்கக் முடியாத விஷயம் ஏதாவது உண்டா?'

'ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டி இருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்? என்கிற விஷயம்தான்!'

- ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள பல்நோக்குக் கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப் பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தி இருக்கிறது.

எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவி முடிய வில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல் கிறாரோ... அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரசாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991-ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.

என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல் நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த டி..ஜி. (DIG) ராஜு அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப்படிப்பு (DECE)படித்தவன் என்றபோது, 'நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?' - என்று கேட்டார்.

எனது பெற்றோர், கல்வி ஒன்றே பெரும் சொத்து எனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பயன்பட்டதோ இல்லையோ... புலனாய்வுத் துறையினர்க்கு இவ் வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்துத் தூக்கு மேடையில் நிறுத்தப் பயன்பட்டது.

அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்திரிக்கப் பயன்படுத்தப் பட்ட எனது கல்வி இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது. சிவராஜன், எல்.டி.டி..-யின் சீனியர் அங்கத்தினர் என்பதால்தான் அவருக்கு நான் மின்கலம், கார் மின்கலம், மோட்டார் சைக்கிள் வாங்கித் தந்ததாகக் கூறுவதே பொருத்தம். ஆனால், ராஜீவ் கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறமுடியாது. சதியின் நோக்கத்துக்கு உடன்பட்டால்தான் இந்திய தண்டனை சட்டம் .120-ன்படி குற்றவாளியாக முடியும்.

எனது வாக்குமூலத்தை முழுமையாக வாசித்தீர் களேயானால், அவ்வாறு கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாக, உதவுவதாக எந்தவொரு சிறு சொல்லை யேனும் தங்களால் காண முடியுமா?

எனக்கு தனு, சுபா ஆகியோருடன் அறிமுகம் இருந்ததாக எவ்வித ஆதாரங்களும் கிடையாது. சிவராசனுடன் மட்டுமே தொடர்பு இருந்ததற்கு ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. எனவே சிவராசன் மட்டுமே எனக்குக் கொலைச் சதி குறித்துக் கூறியிருக்க வேண்டும். எனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அதற்கான எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுடன், சிவராசனுடன் எந்த உரையாடலிலும் நான் பங்கு பெறவில்லை என்பதையே காட்டுகிறது.

ராஜீவ் படுகொலையில் சதிகாரர்களை நான்கு பரந்த வகையினங்களாகக் கூறு பிரிக்கலாம். முதலாவதாக ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய முடிவெடுத்த உறுதியான கரு மையமாக அமைந்திருப்பவர்கள். இரண்டாவதாக, சதி வளையத்தில் சேர்ந்து கொள்ளும் படி மற்றவர்களைத் தூண்டி, சதியில் தீவிரப் பங்கும், மேற்பார்வைப் பங்கும் வகித்தவர்கள். மூன்றாவதாக, கருத்தாக்கத்தின் வாயிலாகவோ, வேறு வழியிலோ தூண்டப்பட்டு சதியில் சேர்ந்தவர்கள். நான்காவது, உள்ள படியே கொலை செய்வதில் பங்கேற்ற சதிகாரர்கள்.

இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தி யதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்விதக் குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச் சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருள்களை நான் வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?

'உண்மை' அரசின் வழக்குக்கு முற்றிலும் புறம்பானதாகவும், கசப்பு மிகுந்ததாகவும் இருப்பினும் அதை நிரூபிக்கும் ஆற்றல், வசதி இந்த எளியவனுக்குக் கிடையாது. 'கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை; உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது' என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை. இன்றைய எனது சூழலில் மனித நேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

இறுதியில் வள்ளுவனின் உலகப் பொதுமறை ஒன்றோடு என் முறையீட்டை நிறைவு செய்கிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கீட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

தங்கள் உண்மையுள்ள...
பேரறிவாளன்!