Wednesday, March 16, 2011

மயிலாடுதுறை கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

திராவிடர்என்பதன் உள்ளடக்கத்தைப் பாருங்கள்! அகராதியில் பொருள் தேடாதீர்!

திராவிடர்என்ற சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்போருக்கு பதிலளித்து மயிலாடு துறை கழகக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

11.3.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சின்னகடைவீதியில் கழகம் சார்பாக தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இர.ரசீத்கான் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சமர் பா. குமரனின் இன எழுச்சிப் பாடல்களோடு துவங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் இரா. முரளிதரன், சுப்பு மகேசு, ம.தி.மு.க. நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

பெரியாரின் கொள்கைகளை, அந்தந்த கால கட்டத்தின் தேவையை கருதி நாம் பல்வேறு போராட்டங்களை, பரப்புரைகளை நடத்தி வருகிறோம். பெரியார் தொடக்கக் காலத்தில் சாதி ஒழிப்பை முதன்மை இலக்காகக் கொண்டிருந்தார். 1926 முதல் பெண் விடுதலையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். 1928 இல் இருந்து பொது வுடைமை கொள்கைகளையும் இணைத்துக் கொள்கிறார். இதன் வளர்ச்சிப் போக்கில் 1938 ஆம் ஆண்டில் தனித்தமிழ்நாடுஎன்ற முடிவுக்கு வருகிறார். (சாதி பேதமற்ற, பாலியல் பேதமற்ற, பொருளாதார பேதமற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்றால் அதற்கு தனித் தமிழ்நாடு தான் தீர்வு என முடிவு செய்கிறார்) இப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்ட பெரியாரியலை மக்கள் முன்னாள் எடுத்துச் செல்கின்ற நாங்கள், அதனுடைய ஒரு பகுதியாகத்தான், தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பரப்புரையை செய்து வருகிறோம் என்று உரையைத் தொடங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இடஒதுக்கீடு சிக்கல்கள் பற்றியும், இன்று தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் பல இருந்தாலும், அவைகளெல்லாம் நடைமுறைபடுத்தாமல் இருப்பது பற்றியும், ஏன் பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள் என்றால், அவரவர்கள் தங்களுக்கு தேவையான வற்றை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதை தடுக்க வேண்டும். எல்லோரும் வணிக நிறுவனத்தை நம்பித்தான் இருக்க வேண்டும் என்றச் சூழலை உருவாக்குவதற்காக பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள். இடப்பெயர்வுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்றும் பச்சைவேட்டை பற்றியும் விரிவாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்... பரப்புரைக் கூட்டங்களில் இந்துமத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மட்டுமே இல்லாமல், பொருளியல் சிக்கல்களை பற்றியும் மக்களிடையே விளக்க வேண்டியதும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற்றிட, இந்திய தேசிய - பன்னாட்டு திட்டங்களுக்கு எதிராக மெல்ல மெல்லவாகிலும், கிளர்ந்து எழ வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டுதான் இந்த பரப்புரையை நடத்தி வருகிறோம். பெரியார் இறுதியாக நடத்திய மாநாடு தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு... அதோடு இழிவு ஒழிப்புக்காக எடுத்துக் கொண்ட திட்டம்தான் தனித் தமிழ்நாடு பரந்த சந்தை வேண்டும் என்று விரும்புகிற பனியாக்களுக்கு - வியாபார கூட்டத்திற்கு - சொந்த நாடே இல்லாத பார்ப்பனர்களுக்கு - வசதியாகவும் இந்திய தேசியத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆனால், நாம் இழிவில் இருந்து விடுபடுவதற் கும், சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கும் இந்திய தேசியம் தடையாக இருக்கிறது. பார்ப்பன - இந்திய தேசியத்திற்கு எதிராகத்தான் திராவிடர்கள் என்ற அணியை பெரியார் உருவாக்கினார். திராவிட நாடு வடநாட்டிலிருந்து பிரிந்து, தனியாக இருக்க விரும்பும் காரணம் கூட, இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்தில் இருக்கும் இழிவும், சுரண்டலும் ஒழிய வேண்டும் என்பதற்கும் ஆகும்என்ற பெரியாரின் பேச்சு 1945 ஆம் ஆண்டு குடிஅரசில் இருக்கிறது. ஆரியர் திராவிடர் எல்லாம் கலந்து விட்டார்களே எப்படி பிரிப்பீர்கள் என்று அப்போது கேட்டார்கள். பெரியார் சொன்னார்... அது எனக்கும் தெரியும். நான் இரத்த பரி சோதனை செய்து ஆரியர் - திராவிடர் என பிரிக்க வில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்கள், ஆச்சார அனுஸ்டானங்களைப் பார்த்துதான் பிரிக்கிறேன்என்று கூறினார். சுத்தமான தமிழ் இரத்தம் ஏதாவது கலந்துவிட்டதா என்று இப் போது பல அறிஞர்கள்(?) பிரித்துக் கொண்டிருக் கிறார்கள். பெங்களூரில் கூட ஒரு அறிஞர் இருக்கிறார். இவர் தெலுங்கர், கன்னடர் என்று ஆய்வு அறிக்கை எல்லாம் போடுவார். ஆனால் பெரியார், இனத்தூய்மை பார்த்து யாரையும் பிரிக்கவில்லை. இழிவில் இருந்து விடுபடுவதற்கு, அதற்கு தடையாக இருக்கிற ஒரே மக்கள் கூட்டத்தைத்தான் பிரித்து வைத்தார். இன்னொரு பக்கம் இதற்கு எதிராக பேசியவர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில்கூட ம.பொ.சி. இருந்தார்.

ம.பொ.சி. ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்...

பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு காரணமா னோர் யாரோ, அவர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழரல்லாதார் ஆதிக்கம் செலுத்த நேர்ந்ததற்கும் காரணம் ஆவார்கள். திராவிட மாயையில் இருந்து விடுபட்டதாக கூறிக்கொண்டு (?) மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து புறப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. முதலில் பிராமணர் - பிராமணரல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்போது தான் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர் வாழ்வு பெற முடியும்என்று ம.பொ.சி. எழுதினார்.

ஆனால், பெரியார் இதில் மாறுபட்டார். யாரை இணைத்துக் கொண்டார், யாரை விலக்கி வைத்தார் என்பதுதான். பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அகராதியில் பொருள் தேடக் கூடாது. அகராதியில் பார்க்கும் போது பலவற்றை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தினோம். ஒருவர் ஆங்கிலத்தில் சொல்வார். அதை நான் தமிழில் மொழி பெயர்ப்பேன்... லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்பார். அதற்கு நான் பெண்களே சாதுவான ஆண்களேஎன்று மொழி பெயர்ப் பேன். ஐ ஏம் கம்மிங் ப்ரம் கிரீன்லேண்ட்என்பார். நான் பச்சை நிலத்திலிருந்து வருகிறேன்என்று மொழி பெயர்ப்பேன். டூ யூ அண்டர்ஸ்டேண்ட்என்பார். அதற்கு நான், “நீ அடியில் நிற்கிறாயாஎன்பேன். வெண்டைக்காயும் முருங்கைகாயும் சாப்பிடுஎன்ற பொருளில், “ஈட் லேடீஸ் பிங்கர் அண்ட் டரம்ஸ்டிக்என்பார். பெண்கள் விரல்களையும் தப்பட்டை குச்சிகளையும் சாப்பிடுங்கள்என்று மொழி பெயர்ப்பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் மொழி பெயர்க்க முடியும்.

ஆட்டம்(atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்க முயாதது என்று பொருள். Dalton’s atomic Theoryசொல்கிறது... atom is indivisible (அணு என்பது பிளக்க முடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்க முடியும் என்பதும், பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலில் (அணு சக்தியில்) இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும், அழிவு வேலைகளையும் செய்ய முடியும் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவை பிளக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில், பிளக்க முடியாதது என்ற பொருளுள்ள ஆட்டம்என்ற சொல்லை மாற்றிவிடவில்லை. பிளக்க முடியும் என தெரிந்த பின்னாலும் ஆட்டம்என்பதை மாற்றவில்லை . ஒரு சொல்லில் ஏற்றப் பட்டிருக்கும் உள்ளடக்கம் தான் முக்கியம் அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஒரு உள்ளடக்கத்தை கொடுத்துள்ளார்.

மக்களை பலவற்றிற்காக பிரிக்கலாம். பள்ளியில் மாணவர்களை பாட தெரிந்தவர் - பாட தெரியாதவர் என ஆசிரியர் பிரிப்பார் நாடகம் போடு வதற்காக! விளையாட்டு ஆசிரியர், உயரமானவர்கள் - உயரம் குறைந்தவர்கள் எனப் பிரிப்பார் கூடை பந்து விளையாட்டிற்கு! இரண்டு ஆசிரியர்களுக்கும் நோக்கம் வேறு. அதைப் போலதான் பெரியாரின் நோக்கம் இழிவு ஒழிப்பு. அதாவது சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு பிரிக்கப்பட்ட பிரிவினைதான் ஆரியர் - திராவிடர். அந்த நோக்கம் இல்லாதவர்கள் மொழி வழியாக நாட்டை மட்டும் பிரித்துக் கொண்டால் போதும் என்று கருதுபவர்கள், இந்த மொழி பேசுபவர்கள், வேறு மொழி பேசுகவர்கள் என்று பிரித்துப் பார்க்கிறார்கள். பெரியாருக்கு தமிழர் என்று மொழி வாரியாக அடையாளப்படுத்துவதைவிட, ‘மனிதர்என்று எல்லோரையும் சமப்படுத்துவது தான் நோக்கம். இழிவை நீக்குவதற்கு தேவையான அடையாளங்களைப் பார்த்து பிரித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சொன்னார்கள்... உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களா எங்களை ஆள்வது? என்று.

இந்திய நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆறாயிரம் மைல் இரண்டாயிரம் மைல்களாக குறைந்திருப்பதை தவிர மற்றவை எல்லாம் அப்படியே தானே இருக்கிறது என்று பெரியார் கேட்டார். மைல்கள் குறைந்திருக்கிறதே தவிர, கேள்விகள் அப்படியேதான் இருக்கிறது. உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. நமது அடிமைத்தனம் அப்படியே தான் தொடர்கிறது. நமது அடிமைத்தனத்தை, பன்னாட்டுச் சுரண்டல், பன்னாட்டு சுரண்டலுக்கு துணையாக இருக்கிற பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சாதி அடிமட்டத்தில் இருக்கிற, எந்த மக்களை பெரியார் உயர்த்த வேண்டும் என விரும்பினாரோ, அந்த மக்களை உயர்த்துவதற்கு, அந்த மக்களை பாதுகாப்பதற்கு - அந்த மக்களின் பொருளியல் வளங்களை பேணுவதற்கு - நமக்கான நாட்டை உருவாக்கிக் கொள்வோம். நமக்கான பொருளாதாரத்தை கட்டமைக்க முயல்வோம். அதுவரை இந்த பொருளாதார சுரண்டல்களை - பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளையை தடுப்பதற்கு நாம் இணைந்து நிற்போம்என்ற வேண்டுகோளோடு உரையை நிறைவு செய்தார்.

Friday, March 11, 2011

ரூ.3,74,937 கோடி - பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

2005-06 ஆம் ஆண்டிலிருந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய்.

(இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2மடங்கு)

இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.240 கோடி!

ஒவ்வொரு நாளும் இதே 240 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக, வெளிநாட்டு வங்கிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

(வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் - Global Financial Integrity - இத்தகவலைத் தெரிவித்துள்ளது)

இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சேவைத் துறைகளிலேயே மிக அதிகமான பாதிப்பு விவசாயத் துறைக்குத் தான்.

(தகவல்: டாட்டா சமூக ஆய்வு மய்யம் - Tata Institute of Social Science

பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798கோடி!

(நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

அப்பல்லோ போன்ற நட்சத்திர ஓட்டல்தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை களுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

(இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.)

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை (நுஒஉளைந) வரி - ரூ.1,98,291 கோடி.

(கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பனியா - பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி.

(21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி)

(2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையும் அவர்களால் செலுத்தப்படாத வரித் தொகையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளதுஎன்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் அதற்கான எந்த மாற்றமும் இல்லை. மேலும் மேலும் கூடுதலாக வரிச் சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளன.

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் பார்ப்பன - பனியா ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பு 1955-59 காலத்தில் கிடைத்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையே கூறுகிறது!

பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

(மார்ச் 7 ஆம் தேதி இந்துஏட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து)

Tuesday, March 1, 2011

ஊடகங்கள் ஊதி விடும் கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்டது. பார்ப்பனர்களும் ஊடகங் களும் கிரிக்கெட்விளையாட்டினை விளையாட்டு என்ற எல்லையைத் தாண்டி சந்தைப் பொருளாதாரமாக்கி அரசியலாக்கி விட்டனர். ஏனைய விளையாட்டுகளின் சிறப்புகள் இருட்டடிக்கப்பட்டுவிட்டன. பார்ப்பனர்கள் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன்? 2003 ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டியின்போது புரட்சிப் பெரியார் முழக்கம்வெளியிட்ட கட்டுரை இது. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருவதால் மீண்டும் வெளியிடுகிறோம்.

பிரிட்டிஷ் பிரபுக்கள் குளிர் காய்வதற்கான நாள் முழுதும் சூரிய ஒளியில் நிற்பதற்குக் கண்டுபிடித்த விளையாட்டுதான் கிரிக்கெட். எனவேதான் அய்ந்து நாள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பார்சிகளும், இதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பிரிட்டிஷாருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இப்படி ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதைத் தாமதமாக உணர்ந்த பார்ப்பனர்கள், அதை பிடித்துக் கொண்டு விட்டனர். ஆஹிஷ் நந்தி என்பவர், கிரிக்கெட்டையும், இந்து மதத்தையும் ஒப்பிட்டு, இது இந்திய விளையாட்டு என்று எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களை கிரிக்கெட் இழுத்ததற்கு மற்றொரு காரணம் - ஹாக்கி, கால்பந்து, வாலிபால், சடுகுடு போல அரைக்கால் சட்டைப் போட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியமில்லை. முழுக்கால் சட்டைப் போட்டுக் கொண்டே கிரிக்கெட் விளையாடலாம்.

இதை எல்லாம் விட மிக முக்கியக் காரணம் - மற்ற விளையாட்டுகளைப் போல், ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியம் இதில் இல்லை. இடித்துத் தள்ளவோ ஒருவர் மீது ஒருவர் உராசிக் கொள்ளவோ தேவை இல்லை. எனவே, தீண்டாமைக் கொள்கையைக் கைவிடாமல் விளையாட லாம். பந்தின் லாவகத்தைக் கணக்கிட்டு மட்டையை சுழற்ற வேண்டிய மூளைக்கான வேலைதான் தேவை. இது பார்ப்பனர்களுக்கு மிகவும் எளிது. அதோடு மற்ற விளையாட்டுகளைப்போல் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தன்னை மய்யப்படுத்திக் கொள்ள முடியும்.

கவாஸ்கர் போன்றவர்கள் இப்படித்தான் தங்களை சாதனையாளர்களாகக் காட்டிக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கிக் கொண்டார் களே தவிர, அணியின் சாதனையாக மாற்றவில்லை. வேகப் பந்து வீச்சாளராக பார்ப்பனர்கள் தங்களது திறமையைக் காட்டவில்லை. காரணம் - அதற்கு அதிகமாக வியர்வை சிந்த வேண்டும். இதனால் தான் பார்ப்பனர்கள் பலர் பேட்ஸ்மேன்களாக பரிணமித்த அளவுக்கு, பவுலர்களாக அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களாக திறமையைக் காட்டவில்லை.

1950 முதல் 1990=கள் வரை நடந்த போட்டிகளில் (டெஸ்ட் மேட்ச்) சராசரியாக 6 பார்ப்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சில நேரங்களில் இந்த எண்ணிக்கை 9 ஆகவும் இருந்திருக்கிறது. 11 பேர் கொண்ட அணியில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே தரப்பட்டதும் உண்டு.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் என்பது 1970களின் இறுதி வரை ஸ்பின் பவுலர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. இந்தப் பார்ப்பனக் கோட்டையைத் தகர்த்தவர் - கபில்தேவ் என்ற பார்ப்பனரல்லாதவர்தான். அவர்தான் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி - உலகத் தரத்தில், ஒரு விளையாட்டாளரானார். கபிலின் வருகையும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் தான் இந்திய கிரிக்கெட்டின் பார்ப்பன முகத்தை மாற்றியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கின.

பிறகு ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அகர்கர் போன்ற பார்ப்பனர்கள் கூட வேகப்பந்து வீச்சில் திறமை காட்டத் தொடங்கியதற்குக் காரணம், கபில்தேவ் வருகைதான்.

அய்ந்து நாள் டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடப்பட்டு வந்த காலத்தில் கவாஸ்கர் போன்ற பார்ப்பனர்கள் ஒரு சதம் அடிப்பதற்கு 2, 3 நாட்களைக் கூட எடுத்துக் கொள்வார்கள். எத்தனை ஓட்டங்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் களத்தில் நிலைத்து நின்றார் என்பதுதான் பெருமையாகக் கருதப்பட்டது. இப்படி நிலைத்து நிற்பவர்கள், ஆபத்தான கட்டத்தில் டிராஎன்ற கவசத்தைப் பயன்படுத்தி தோல்வியி லிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். கவாஸ்கர், கெய்க்வாட், யஷ்பால், சர்மா போன்ற பார்ப்பனர்கள் இந்த தந்திரத்தைத்தான் பல நேரங்களில் கடை பிடித்துள்ளனர்.

இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, ஒரு வங்காளப் பார்ப்பனர். சுறுசுறுப்பு இல்லாதவர் என்றும், பலமுறை கோட்டை விட்டவர் என்றும் ரசிகர்களால் விமர்சிக்கப் படுபவர். கிரிக்கெட் வல்லுனர்கள், அவரது விளையாட்டைக் கடுமையாகக் குறை கூறுகிறார்கள். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீநாத் எனும் பார்ப்பனர் - ஒரு சைவ உணவாளர். ஆச்சாரப்படி அசைவம் சாப்பிட மாட்டார். ஆனாலும் பந்து வீச்சுத் திறனை அதிகரிக்க மாமிசம் சாப்பிட வேண்டும் என்று பயிற்சியாளர் அறிவுறத்திய பிறகு அசைவமாகி விட்டார்.

5 நாள் போட்டிக்கு தான் பார்ப்பனர்கள் சரிப்படு வார்கள். ஒரு நாள் போட்டிக்கான சுறுசுறுப்பான உடல்வாகு அவர்களுக்கு இல்லை. இப்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீநாத், கும்ப்ளே, அகர்கர் ஆகிய ஆறு பார்ப்பனர்கள் இடம் பிடித் துள்ளனர்.

இந்திய அணியில் தலித்துகளுக்கு எப்போதுமே இடம் கிடையாது. வினேன் காம்ப்ளி என்ற மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் மட்டும் இருக்கிறார். இது தவிர, பல்வங்க் பலூ என்ற தலித் வீரரை மட்டும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுத்தனர். அவரையும்கூட, களத்தில் இறக்கிவிடாமல், அரங்கத்தில் உட்கார வைத்தே திருப்பி அனுப்பி விட்டார்கள்.

கேரளாவிலிருந்து வந்த டினு யோகானன், தடகள வீரருக்கு உரிய உடல்கட்டு கொண்டவர்.

இவரது தந்தை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர். நல்ல விளையாட்டுக் குடும்பத்தில் வந்த இவரை, மும்பை பார்ப்பனர் அகர்கருக்காக, பலிகடாவாக்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்று கேரள கிரிக்கெட் ரசிகர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய இடம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்யர் - அய்யங்கார் பிரச்னை பெரிதாக இருக்கிறதாம். எஸ்.வி.டி. சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், ராமன், சடகோபன் ரமேஷ் என்று அய்யங்கார்கள் தான் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிவராமகிருஷ்ணன், வி.வி.குமார் என்ற இருவர் மட்டும்தான் அய்யர்கள் என்கிறது சேப்பாக்க கிரிக்கெட் வட்டாரம்.

(2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த கட்டுரை யில் கூறப்பட்ட கருத்துகளில் இப்போது பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதே நிலைதான் நீடிக்கிறது.)

குழந்தைகள் உரிமை: ம.பி. மாநிலத்தில் நடக்கும் பார்ப்பன கூத்து

ம.பி. மாநில அரசு குழந்தைகள் உரிமைகளுக்கான குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர். தலைமை பெண் நீதிபதி ஷீலா கண்ணா, ம.பி. மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்கள். இவர்களுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் குழந்தைகள் உரிமைகளுக்கான குழுத் தலைவர் அதற்காக கூறியுள்ள பரிந்துரை கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.

ஒவ்வொரு குழந்தைகள் நலன் மய்யத்திலும் ஒரு பார்ப்பன சோதிடரையோ அல்லது அர்ச்சகரையோ நியமிக்க வேண்டும். குழந்தைகளின் சோதிடத்தைப் பார்த்து அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வரக் கூடிய வாய்ப்புண்டா என்று சோதிடத்தின் அடிப்படையில் அந்தப் பார்ப்பனர் மதிப்பிட nண்டும். அப்படி சிறந்தவர்களாக வருவார்கள் என்று பார்ப்பனர் பரிந்துரைக்கும் குழந்தைக்கு மட்டும் அரசு உரிய சிகிச்சை வழங்கி உதவிட வேண்டும். மற்ற குழந்தைகள் பற்றி கவலைப்படத் தேவையில்லைஎன்று கூறியிருக்கிறார். இதற்கு சமுக சேவை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, குழந்தைகள் உரிமைக்கான மய்யத்தின் தலைவர் பார்த்தி அலி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்புக்குப் பிறகு நீதிபதி, தாம் அப்படி ஏதும் எழுத்து வடிவில் தெரிவிக்கவில்லை என்று மறுத்துள்ளார். குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக நடந்த விவாதத்தின் போது நீதிபதி ஷீலா கண்ணா, இக்கருத்தை முன் வைத்துள்ளார் என்று குழந்தைகளுக்கான தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. நாட்டின் தலைமை நீதிபதிகளாக இத்தகைய சாதிவெறி மூடநம்பிக்கையுள்ள பார்ப்பனர்கள் இருப்பது வெட்கக் கேடு அல்லவா? இத்தகைய நீதிபதிகளிடமிருந்து கிடைக்கும் தீர்ப்புகள் எத்தகையதாக இருக்கும்?

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்; தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மின்தடையா? மார்ச் 5 இல் மின்வாரியங்கள் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டம் பிப். 26, 27 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது. முதல் நாள் அண்ணாமலை ஓட்டல் அரங்கிலும், இரண்டாம் நாள் திவ்யோதயா அரங் கிலும் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செய லாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் களும் கழகத் தோழர்களும் பார்வையாளர்களாக பங்கேற்றனர். கழகத்தின் செயல்பாடுகள், திட்டங் கள் குறித்தும் தங்கள் கருத்துகளை மாவட்டக் கழகங் கள் சார்பாக தோழர்களுடன் கலந்து விவாதித்து மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் அறிக்கைகளாக தயாரித்து வந்தனர். அதனடிப் படையில் விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. கூட்டத்தில் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ) தமிழ்நாட்டில் சில நாட்களில் மேனிலைப் பள்ளி களில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும், கல்லூரித் தேர்வு களும் நடக்க இருக்கின்றன. இந் நிலையில் தமிழ்நாட்டில் வழக்கமான இரண்டு மணி நேர பகல் மின்வெட்டுக்குப் பதிலாக மூன்று மணி நேரமும், அதற்கு அதிகமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலோ முன் அறிவிப் பின்றி மின்வெட்டு அன்றாடம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து படிக்கும் முதல் தலைமுறை யினருக்கும், பேரூர்களிலும், நகரங்களிலும் வசிக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கும் மின்தடைகளின்போது வெளிச்சத்துக்கு மாற்று மின்சாரத்தை ஆக்கும் சாதனங் கள் எதுவும் இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.

ஆனால், இந்நாட்டு வெகு மக்களுக்கு வேலை வாய்ப்பு எதையும் தராத பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், வெளியிலும் தொழி லாளர்களுக்கான இந்நாட்டின் பாதுகாப்பு சட்டங்கள் எதையும் பின்பற்ற வேண்டியதில்லை என்ற விதிவிலக் கோடும், தடையில்லா மின்சாரத்தை எப்போதும் குறிப்பிட்ட குறைந்த விலையிலேயே கொடுக்கப்படும் என்ற ஒப்பந்தத் திலும், மக்கள் நலனில் அக்கறையில்லாத ஊழல் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டு வருவது பேரவலமாகும்.

எனவே, இந்நாட்டின் பெரும்பான்மையாகவும், தங்களது கடும் உழைப்பால் அனைத்து வளங்களையும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளை களின் கல்வித் தேர்வுகளுக்கு பெரும் இடையூறாக உள்ள மின்வெட்டை 2011, மே மாத இறுதி வரையிலாவது அறவே ரத்து செய்து முழு நாளும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வாய்ப்புள்ள இடங்களில் மின்சார அலுவலகங்களுக்கு முன்னர் வருகிற மார்ச் 5 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று செயற்குழு தீர்மானிக்கிறது.

வீடுகளுக்கான மின்சாரத்தை முழுமையாக வழங்கு கிறோம் என்ற காரணம் காட்டி, விவசாயத்துக்கோ, சிறு தொழில்களுக்கோ கொடுக்கப்படும் மின்சாரத்தை நிறுத்தவோ, நேரத்தை குறைக்கவோ கூடாது என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தேர்வை எதிர் கொண்டிருக்கிற மாணவர்களைத் தவிர பிற மாணவர் களும், பெற்றோர்களும், வெகுமக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது.

ஆ) பொது இடங்களில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை இருந்தாலும், மதப் பண்டிகைகள் மத விழாக்களில் இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் மாணவர்கள் தேர்வு காலங்களில் படிப்பதற்கு பெரும் இடையூறாகி விடுகிறது. நீதிமன்ற ஆணைகளுக்கு எதிரான இந்த சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. (இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நகல்களை காவல் நிலையங் களுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது)

மாநில செயற்குழுவில் உரையாற்றிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் : வெள்ளமடை நாகராசு (கோவை வடக்கு), கா.சு.நாகராசு (கோவை தெற்கு), வழக்கறிஞர் சாஜித் (கோவை மாநகரம்), இலக்குமணன் (பெரம்பலூர்), தமிழ்ப்பித்தன் (பெரம்பலூர்), துரை. சம்பத் (திண்டுக்கல்), அழகிரி (கடலூர்), இராம. இளங்கோவன் (ஈரோடு), டேவிட் (சேலம்), குமாரதேவன் (வடசென்னை), அன்பு. தனசேகர் (தென்சென்னை), திலீபன் (வேலூர்), அய்யனார் (விழுப்புரம்), சாமிநாதன் (நாமக்கல்), தனபால் (கரூர்), வேடியப்பன் (தருமபுரி), ரசீத்கான் (நாகை), துரைசாமி (திருப்பூர்), சோலை மாரியப்பன் (தஞ்சை), பகுத்தறிவாளன் (அரியலூர்), பால். பிரபாகரன் (தூத்துக்குடி). பார்வையாளர் களாக பங்கேற்ற கழகத்தினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். மாநகர பொறுப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.


சட்டத்தைக் காக்க - கழகம் களமிறங்குகிறது

சுடுகாடுகளை - சாதிவாரியாகப் பிரிக்கும் இரட்டைச் சுவர்கள் இடிக்கப்படும்

கோவையில் கூடிய கழக மாநில செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம்:

மனித குல சமத்துவத்துக்கும், மாண்புக்கும், முரணாகவும், உழைக்கும் அடித்தட்டு மக்களின் சுயமரியாதைக்கு எதிராகவும், ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் பெரியாரின் வாரிசுகளாக தங்களை சொல்லிக் கொள்ளுகிற அரசுகளின் ஆட்சியிலும் சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும் சாதிக்கு, தனித் தனியாக இருப்பது கேவலமான ஒன்றாகும்.

அதுவும் தமிழ்நாடு அரசு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற தனது திட்ட நிதியிலிருந்து கட்டப்படும் இடுகாடு, சுடுகாடுகளிலும்கூட தாழ்த்தப்பட் டோருக்கு என தனியாகவும், பிற மக்களுக்கு என தனியாகவும் உள்ள நிலை மிகமிகக் கேவலமானதும், அரசியல் அமைப்புக்கே எதிரானதும் ஆகும்.

அரசின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் சமத்துவத்தை நெஞ்சில் ஏந்தியும் அரசியல் சட்டத்தையும், பிற சட்டங்களையும் மதித்துப் பேணும் நோக்கத்தோடும், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்ற சட்ட உணர்வோடும், புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாளுக்குள் வாய்ப்பான நாளில் அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுடுகாடுகளைப் பிரிக்கும் இடைச் சுவரை உடைத்தும், தனித் தனி இடங்களில் இருந்தால் அறிவிப்புப் பலகையிலுள்ள தாழ்த்தப்பட்டோர் சுடுகாடு என்ற எழுத்துக்களை தார் கொண்டு அழித்தும், அரசின் தவறான போக்கை அம்பலப்படுத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

104 கிராமங்களில் தொடர்கிறது இரட்டைக் குவளை முறை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 213 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், 104 கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை இருப்பது மதுரை எவிடன்ஸ்அமைப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

மதுரையில் 13 கிராமங்கள், திண்டுக்கல்லில் 24 கிராமங்கள், சிவகங்கையில் 15 கிராமங்கள் என, 213 கிராமங்களில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை, இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், 104 கிராமங்களில் டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இன்னும் இருப்பது கண்டறியப்பட்டது. சில கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத் தினருக்கு கண்ணாடி குவளையும், ஆதி திராவிடர் களுக்கு சில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கப் படுகிறது. தமிழகத்தில் 208 கிராமங்களில், சாதி ரீதியாக சுடுகாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 97 கிராமங்களில் ஆதி திராவிடர் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்து செல்ல முடியாது. 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாது. ஆதி திராவிடர் சுடுகாடுகளில் தண்ணீர், மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் இல்லை.

சலூன் கடைகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுகிறது. 142 கிராமங்களில் ஆதி திராவிடர்களுக்கு முடிவெட்டக் கூடாது என தடையுள்ளது. சில கிராமங்களில் முடிவெட்டும் கருவிகள் இரண்டு செட்வைத்துக் கொண்டு, அதில் ஒன்றை ஆதி திராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதேபோல், ரேஷன் கடைகள், மருத்துவமனைகள், சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது. 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகியுள்ளனர்.