Sunday, April 24, 2011

இரட்டைக்குவளைகளை அகற்றாத கலெக்டர், எஸ்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! உச்சநீதிமன்றம் ஆணை!

நாங்கள் இந்த உண்மைகளை சுய-ஆதாரமாகக் கொள்கிறோம்; அதாவது, எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டவர்கள்; தம்மை படைக்கப்பட்டவரால் அவர்கள் சில பிரிக்கமுடியாத உரிமைகளால் பரிசளிக்கப்பட்டிருக்கிறார்கள்; வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்கான அவர்தம் முயற்சிக்கான உரிமைகள் அவற்றுள்ளானவை. தாமஸ் ஜெஃபர்சன். -அமெரிக்க சுதந்திர சாற்றுரை, 1776

1. நினைவில்கொள்ளத்தக்க இவ்வரிகளை தாமஸ் ஜெஃபர்சன் எழுதி இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன; இவ்வரிகள் இன்னும் வரலாற்றில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஒரு பிரிவைச் சார்ந்த இந்திய சமூகம் தனது சொந்த நாட்டுக்காரரில் வேறொரு பிரிவைச் சார்ந்த இந்திய சமூகத்தை கீழானவர்களாக நடத்துகிறார்கள். இந்த நவீன உலகில் இம்மாதிரியான மனநிலையை ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சில முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

2. விடுப்பு அனுமதிக்கப்பட்டது.

3. கற்றறிந்த மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் (கிரிமினல் மேற்முறையீட்டு எண்கள் 536-37/2001 யில்) 25.01.2008 நாளிட்ட உத்தரவு மற்றும் பொது தீர்ப்பிற்கு எதிராக இம்மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. மேல்முறையீட்டாளர்களின் மீதான குற்றச்சாட்டு என்னவெனில், புகார்தாரர்களான பன்னீர்செல்வம் மற்றும் மகாமணி ஆகியோருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே 1.7.1999 அன்று ஒரு கோவில் திருழாவில் ஜல்லிக்கட்டில் காளை மாடுகளைப் பூட்டும் விதத்தில் ஏற்பட்ட சச்சரவு. மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, அப்பொழுது “நீ ஒரு பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியை திங்கிறவன்என்று பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்திவிட்டார். எண் 1,7 மற்றும் 9-யில் குற்றம்சாட்டப்பட்டோர் கட்டைகளால் பன்னீர்செல்வத்தின் இடது தோளில் காயமுறும் வகையில் தாக்கினார்கள். அப்பொழுது குறுக்கிட்ட மகாமணியையும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கட்டைகளால் தாக்கினார்கள், இதனால் மகாமணி தலை உடைந்தது, வெட்டுக்காயம் ஏற்பட்டது.

5. இந்நிகழ்விற்குக் கயமடைந்த இவ்விரண்டு கண்ணால் பார்த்த சாட்சிகளோடு மேலும் மூன்று கண்ணால் பார்த்த சாட்சிகள் இருக்கின்றன. மருத்துவர்கள், இக்காயங்களை உறுதிசெய்திருக்கிறார்கள். மகாமணியின் தலைக்காயம் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கொலைவெறியை உணர்த்துகிறது.

6. இரண்டு கீழ்நீதிமன்றங்களும் இதனை பிராசிகுயூசன் வழக்காக கருதும் வகையில் இந்நீதிமன்றத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை.

7. மேல்முறையீட்டாளர்கள் ‘சேர்வைசாதியைச் சேர்ந்தவர்கள், புகார்தாரர்கள் ‘பள்ளன்என்ற சாதியைச் சேர்ந்தவர்கள்; அது தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி.

8. சந்தேகத்திற்கிடமில்லாமல் “பள்ளன்சென்ற சொல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கின்றது, மேலும் அது கேவலப்படுத்தும் பொருளில் ஒருசிலரை அவமானப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. (எப்படி வட இந்தியாவில் ‘சமர்என்கிற சொல் ஒரு சாதியை குறிப்பதோடு ஒரு சிலரை அவமானப்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறதோ அது போல). தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு நபரை ‘பள்ளன்என்று அவமானப்படுத்தும் நோக்கில் அழைப்பது, எங்கள் கருத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989ன் பிரிவு3(1)(x) யின் படிஒரு குற்றமே (இனி அது sc/st சட்டம் என்று குறிப்பிடப்படும்). தமிழ்நாட்டில் ஒரு நபரை “பள்ளப்பயல்என்று அழைப்பது இன்னும் கூடுதலான அவமதிப்பே, அதனால் இன்னும் கூடுதலான குற்றமே.

9. இதுபோலவே, தமிழ்நாட்டில் “பறையன்என்று ஒரு சாதி இருக்கின்றது. பறையன்என்ற அவ்வார்த்தை கேவலப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. பறைப்பயன்என்ற சொல் இன்னும் கூடுதலாக கேவலப்படுத்துவதே.

10. எங்கள் கருத்தில் ‘பள்ளன்’, ‘பள்ளப்பயல்’, ’பறையன்’, பறைப்பயல்போன்ற சொற்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்று, மேலும் அது sc/st சட்டப்படி ஒரு குற்றமே; இந்நவீன காலத்தில் எப்படி ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு ‘நீக்கர்அல்லது ‘நீக்ரோஎன்ற சொல் சற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றோ அது போல (50௦ ஆண்டுகளுக்கு முன் அவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன).

11. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 1-ஆம் நபர் பள்ளப்பயல்என்ற சொல்லை பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தவே பயன்படுத்தினார். எனவே இது sc/stசட்டப்படி ஒரு குற்றமே.

12. இந்த நவீன உலகில் யாருடைய உணர்வுகளும் புண்படுத்தப்படக்கூடாதவை. குறிப்பாக இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் ஒருவருடைய சாதி, மதம், குழு, மொழி இன்னபிறவற்றின் பெயரால் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தப்படாதவகையில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நமது நாட்டை நாம் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் பாதுகாக்கமுடியும்.

13. அரசுக்கு எதிரான சுவரன் சிங் மற்றும் பலர் வழக்கில் (2008)

12 SCR 132, இந்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு அவதானிக்கின்றது (இவ்வழக்கின் பத்திகள் 21 to 24):

"21. இந்நாட்களில் ‘சமர்என்ற சொல் அடிக்கடி உயர் சாதிகளைச் சார்ந்தவராலோ அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவராலோ கூட பயன்படுத்தப்படக்கூடிய ஒரு அவமானப்படுத்துவதற்கான சொல், ஒரு ஏச்சு, கேலியாகும். ஒரு நபரை ‘சமர்என்று அழைப்பது ஒரு ஏச்சுச் சொல்லாகும், அது மிகவும் குற்றமாகும். உண்மையில் ‘சமர்என்ற சொல் இன்று ஒரு சாதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் ஒரு நபரை அவமானப்படுத்துவதற்கும் இழிவுபடுத்துவதற்குமே பயன்படுத்தப் படுகிறது.

22. இவ்விடத்தில் குறிப்பிடப்படவேண்டியது என்னவென்றால், இச்சட்டத்தின் பிரிவு3(1)(x)-யை பொருள்படுத்தும் பொழுது இந்தச்சட்டம் எந்தக் குறிக்கோளுக்காக இயற்றப்பட்டது என்று பார்க்கவேண்டும். இது அப்பிரிவு மக்கள் மீதான பழிப்பையும், இழிவையும், உலைச்சலையும் தடுப்பதற்காக வெளிப்படையாகவே உருவாக்கப்பட்டது. அது அச்சட்ட்த்தின் நோக்கம் மற்றும் காரணங்களில் கூறப்பட்ட கூற்றிலிருந்து ஆதாரப்படுகிறது. எனவே அச்சட்டத்தின் 3(1)(x) பிரிவை பொருள்படுத்தும் போது சமர்என்ற சொல்லின் சொல்லிலக்கணம் பற்றியன்றி, அதன் பிரபலமான பொருளாட்சி என்ன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். நாம் சொல்லிலக்கணத்தின்படி சென்றால், அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே முறியடித்தவர்களா வோம், எனவே அது சரியான பொருள்படுத்தும் வகையன்று.

23. இது குடியாட்சி மற்றும் சமத்துவத்தின் காலம். எந்த மக்களும் அல்லது சமூகப்பிரிவும் அவமானப்படுத்தப்படவோ தாழ்வாக நினைக்கப்படவோ கூடாது, மேலும் யாருடைய உணர்வுகளும் புண்படுத்தப்படக்கூடாதவை. இதுதான் நமது அரசியல் சட்டத்தின் உயிராகும், மேலும் அதன் அடிப்படைக்கூறுகளின் பகுதியாகும். எனவே, எங்கள் கருத்தில், தாழ்த்தப்பட்ட நபரை விழிக்கும் போது உயர்சாதியினரோ, பிற்படுத்தப்பட்ட சாதியினரோ அச்சாதியைச் சார்ந்த ஒரு நபரையே கூட ‘சமர்என்ற சொல்லைப் பயன்படுத்தி அழைக்கக்கூடாது. ஏனென்றால், அச்சொற்பயன்பாடு அவரின் உணர்வுகளைப் புண்படுத்தும். பல மதங்கள், சாதிகள், இன, மொழி கூட்டங்கள் இன்னும் பிறவகையினராக மக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டைப்போன்ற ஒரு நாட்டில் எல்லா வகுப்பைச் சார்ந்தோரும், குழுவைச் சார்ந்தோரும் மரியாதையோடு நடத்தப்படவேண்டும். மேலும் யாரும் யாரையும் கீழ்நிலையில் வைத்துப்பார்க்கக் கூடாது. இதுதான் நமது நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கான ஒரே வழி.

24. எங்கள் கருத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நபரை ‘சமர்என்று ஒரு பொது இடத்தில் அவரை அவமானப்படுத்தும் அல்லது பழிக்கும் நோக்கத்தில் அழைப்பது நிச்சயமாக அச்சட்டத்தின் பிரிவு 3(1)(x)-யின் படி குற்றமாகும். ‘சமர்என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் அவமானப்படுத்துதல் அல்லது பழித்தல் என்ற நோக்கம் இருந்ததா என்பது அச்சொல் பயன்படுத்தப்பட்ட சூழலைச் சார்ந்தது என்பது உண்மையே.

14. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரட்டைக் குவளை முறை இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நாங்கள் மேலும் குறிப்பிடுகிறோம். இரட்டைக் குவளை முறையென்றால், பல தேனீர் கடைகளில், உணவு விடுதிகளில் தாழ்த்தப்பட்ட நபர்களுக்கும் தாழ்த்தப்படாத நபர்களுக்கும் தனித்தனி குவளைகளில் தேனீரோ அல்லது பிற குடிபானங்கள் பரிமாறப்படுகிறது. எங்கள் கருத்தில் இது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும், sc/st சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். எனவே, இந்நடைமுறையை பின்பற்றுவோர்கள், குற்றமுள்ளவர்களாகக் காணப்பட்டால் கிரிமினல் பிரிவில் உட்படுத்தப்படவேண்டியவர்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டியவர்கள். அனைத்து நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இதைப்பற்றித் தெரிந்தும் குற்றவாளிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் இக்குற்றங்களுக்குப் பொறுப்பாளிகளாக்கப்படவேண்டும். மேலும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியவர்கள்.

15. உ.பி அரசுக்கு எதிராக லதா சிங் (2006) 5 SCC 475, வழக்கில் இந்த நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு அவதானிக்கின்றது (பத்திகள் 14 to 18):

"14. இந்த வழக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு நடைமுறையை வெளிப்படுத்துகிறது. புகாரளித்தவர் ஒரு பருவமடைந்தவர், மேலும் எல்லா தொடர்புடைய நிகழ்ச்சி நடந்த சமயங்களிலும் பருவமடைந்தவராகவே இருந்திருக்கின்றார். எனவே, அந்தப் பெண், தான் விரும்பும் அல்லது யாரோடு தான் வாழ விரும்புகிறாரோ அவரைத் திருமணம் செய்துகொள்ள சுதந்திரம் பெற்றவர். இங்கே இந்துச் சட்டப்படியோ அல்லது வேறு எந்தச் சட்டப்படியோ சாதிகளுக்கிடையேயான திருமணத்திற்கு தடையேதும் இல்லை. எனவே புகார்தாரரால், அவருடைய கணவரால் அல்லது அவருடைய கணவரின் உறவினர்களால் எந்தக் குற்றமும் இழைத்திருப்பதை எங்களால் காணமுடியவில்லை.

15. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் கருத்தில் எந்தக் குற்றமும் செய்யவில்லை (கணவனும் மனைவியும் சாதி மாற்று திருமணம் செய்துகொண்டவர்கள்). மேலும், புகார்தாரர் தனது சாதியை விட்டு மாற்று சாதியில் திருமணம் செய்துகொண்டதால் கோவமடைந்திருக்கும் காரணத்தால், புகார்தாரரின் சகோதரர்களால் இந்தக் கிரிமினல் வழக்கு நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரத்தின் செயல்பாட்டைப் பழிக்கும் வகையில் சாட்டப்பட்டிருக்கிறது. புகார்தாரரின் சகோதரர்களின் அடாவடித்தனத்திற்கும் சட்டவிரோதமான செயல்பாட்டின் (விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக் கின்றது) மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக புகார்தாரரின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதைக் கவனிக்கும்போது நாங்கள் இடர்பாடு அடைந்திருக்கின்றோம்.

16. தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்துகொள்ளும் இளம் பெண்களையும் ஆண்களையும் உலைச்சலுக்காளாக்குதல், பயமுறுத் துதல், அவர்களுக்கு எதிராக வன்முறையை ஏவுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் எங்கள் கவனத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. நாங்கள் இந்த விசயத்தில் ஒரு பொதுகருத்து தெரிவிக்கவேண்டியது அவசியம் என்று உணர்கிறோம். இந்த நாடு நமது வரலாற்றில் ஒரு முக்கியமான காலமாறுபாட்டில் பயணம் செய்துகொண்டிருது. இந்த நீதிமன்றம் இவ்வழக்கு போன்ற பொது மக்கள் சார்ந்த விசயத்தில் அமைதியாக இருக்கமுடியாது.

17. எனவே, நாங்கள் நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளை இத்தகு கொடிய செயல்பாடுகளைத் தடுக்கும் வலிமையான நடவடிக்கைகள் எடுக்க ஆணையிடுகிறோம். இதுபோல் ஏதாவது நிகழ்வுகள் நடந்தால், அத்தகு கொடிய நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பதோடு அந்த மாவட்ட ஆட்சித்தலைவரை மேலும் காவல் கண்காணிப்பாளரை மற்றும் அதனோடு தொடர்புடைய பிற அதிகாரிகளையும் உடனடியாக மாநில அரசு பணியிடைநீக்கம் செய்யவேண்டும். மேலும், அவர்கள் இக்குற்றங்களை தடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை சாட்டவேண்டும், துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இவ்வதிகாரிகள் (1) அத்தகு நிகழ்வுகள் ஏற்கனவே நடக்காமலிருந்து ஆனால் அவை நடக்கவிருக்கின்றது என்று முன்கூட்டியே அறிந்திருந்தும் தடுக்காமல் இருந்தால் அல்லது (2) அந்நிகழ்வு நடந்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்யாமல் மேலும் அவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எங்கள் கருத்தளவில் இத்தகு நிகழ்வுகளுக்கு நேரிடையகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பானவர்கள்.

18. மேல்முறையீட்டாளர்கள் இவ்வழக்கில் நாகரிகமற்ற காட்டுமிராண்டி களாக நடந்துகொண்டார்கள். எனவே அவர்கள் எந்தக் கருணைக்கும் தகுதியுடையவர்கள் அல்லர். இந்த அவதானிப்புகளோடு இந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்.

19. இத்தீர்ப்பின் நகல்களை, மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மட்டத்தில் எல்லா அதிகாரிகளுக்கும் சுற்றுக்கு விடப்படவேண்டும் என்ற கட்டளையோடு/வழிகாட்டுதலோடு அனைத்து மாநில யூனியன் பிரதேச தலைமைச் செய்யலர்களுக்கு, உள்துறைச் செயலர்களுக்கு, காவல்துறை இயக்குனர்களுக்கும் கீழ்படிதலுக்கு அனுப்பப்படவேண்டும். மேலும், இத்தீர்ப்பின் நகல்கள் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு அனுப்பட்டவேண்டும், அவர்கள் எல்லா நீதிபதிகளுக்கும் சுற்றுக்குவிடவேண்டும்.

-----மார்க்கண்டேய கட்சூ -----கியான் சுத மிஷ்ராபுது தில்லி 19.04.2011

Bench: A K Ganguly, S Kumar IN THE SUPREME COURT OF INDIA

CRIMINAL APPELLATE JURISDICTION - CRIMINAL APPEAL NO._958__of 2011

[Arising out of SLP(Criminal) No. 8084 of 2009]

Arumugam Servai .. Appellant (s) -versus- State of Tamil Nadu .. Respondent WITH

CRIMINAL APPEAL NO. 959 of 2011

[Arising out of SLP (Criminal) No. 8428 of 2009] Ajit Kumar and others .. Appellant

(s) -versus-State of Tamil Nadu ..

Respondent J U D G M E N T MARKANDEY KATJU, J.

Thursday, April 7, 2011

பினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு சுடுகாட்டில் இரண்டு தகன மேடைகள் [பினம் எரிக்கும் மேடை] கட்டப்பட்டுள்ளது.

இறந்தபின்பு பினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது என்பதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மற்றொன்றுமாக அருகருகே கட்டப்பட்டுள்ளது. இரண்டிற்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டர் ஜாதியை சார்ந்தவர்கள் அதிகமாக வாழும் இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு, தாழ்த்தப்பட்டவர் மட்டுமே போட்டியிடமுடியும் என்பதால், இங்கு தாழ்த்தப்பட்ட ஒருவரே ஊராட்சி தலைவராக இருந்தும் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.
சுடுகாட்டின் அருகில் இருக்கும் பெயர் பலகை

ஒரு சுடுகாட்டில் இரண்டு தகன மேடைகள்




தாழ்த்தப்பட்டவர் பினத்தை எரிக்கும் இடம்
பிற்படுத்தப்பட்டவர் பினத்தை எரிக்கும் இடம்