Thursday, December 27, 2012

மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டின் தீர்மானங்கள்


தீர்மானம்: 1

உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் செய்து கொண்டிருப்பது மனுசாஸ்திரம். இப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதை அறியாதவர்கள் கூட, வர்ணாஸ்ரம உளவியலில் கட்டுண்டு ஊறிப்போய் நிற்கின்றனர். இந்த வர்ணாஸ்ரமம் வழியாக – காலம் காலமாக, சமூக – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள் – இந்த சமூக அமைப்பு உருக்குலையாமல், அரண் அமைத்து வருகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே முரணானது இந்த மனுசாஸ்திரம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம்; சட்டத்தின் முன் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுசாஸ்திரம். ‘பிராமணனுக்கு’ அடிமையான ‘சூத்திரரின்’ கல்விக்கு தடை போடுகிறது மனுசாஸ்திரம்; மாறாக, கட்டாய இலவச கல்வியை அனைவருக்கும் வலியுறுத்துகிறது அரசியல் சட்டம். குழந்தைகளுக்கு – இளம் வயதிலேயே – திருமணம் செய்ய வலியுறுத்துகிறது மனுசாஸ்திரம்; அதைக் குற்றமாக்கி திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது அரசியல் சட்டம். பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவள் என்கிறது மனுசாஸ்திரம்; இருவருக்கும் – சம உரிமை உண்டு என்கிறது அரசியல் சட்டம். ஆனால் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவிடாமல், தடைச்சுவராக நிற்கிறது மனுசாஸ்திரம்.
இப்படி சட்டத்துக்கு நேர் முரணான – மனுசாஸ்திரத்தை – பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் தடையின்றி அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். பழக்க வழக்கங்கள், சடங்குகள், வாழ்வியல், வழியாக, சமூகத்திலும் தொடர்ந்து நீடிக்கச் செய்து வருகிறார்கள். சமூக மாற்றத்துக்கான எந்த திட்டங்களானாலும் – சட்டங்களானாலும் அதன் நோக்கத்தை அடைய விடாது – தடுப்பது, இந்த பாசிச பார்ப்பனிய மனுசாஸ்திர சிந்தனையும் – அதன் வழி கட்டமைக்கப்பட்ட ஜாதிய சமூகமும் தான்; இந்த எதார்த்தத்தையும், கடந்த காலங்களிலிருந்து பெற்று வரும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு – மக்கள் நலனில், விடுதலையில் உண்மையான கவலைக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள், பார்ப்பனிய மனுசாஸ்திர கட்டமைப்புகளுக்கு எதிரான இயக்கங்களை நடத்த முன் வர வேண்டும் என்று இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. இதன் முதற்கட்டமாக, அரசியல் சட்டத்துக்கே எதிரான ‘மனுசாஸ்திரத்தை’ சட்ட விரோதமாக அறிவித்து – அதை அச்சிட்டுப் பரப்புவதை குற்றமாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.


தீர்மானம்:2

மனுசாஸ்திரம் கட்டமைத்துள்ள வர்ணாஸ்ரம அமைப்பில் உழைக்கும் மக்களை ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தி – சமூகத்திலிருந்து ஒதுக்கி – ஊருக்கு வெளியே சேரிகளில் தனிமைப்படுத்தியது.

புத்தர், ஜோதிபாபுலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட – மனுசாஸ்திர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களால் – விழிப்புற்று – ஓரளவு உரிமை பெற்று – சம உரிமைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நிலையில் –மனுசாஸ்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் சாதிய சக்திகள் களமிறங்கியுள்ளன.

மீண்டும் மனுசாஸ்திரம் காட்டும் வழியில் ‘தீண்டப்படாத மக்களை - ஒதுக்கி வைக்கும் மிரட்டல்களை வெளிப்படையாகவே தொடங்கி விட்டனர்; இந்த நவீன மனுவாத சக்திகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் ஜாதி – பார்ப்பனிய மனுவாதிகள் எதிர்ப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி ஜாதிவெறி சக்திகளை முறியடிக்க இந்த மாநாடு உறுதியேற்கிறது.


தீர்மானம்:3

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன பிரிவில் அடங்கியுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையினரான புதிரை வண்ணார், காட்டு நாயக்கர், நரிக்குறவர், குயவர், வண்ணார், நாவிதர், போயர் போன்ற பல்வேறு சமுதாயப் பிரிவினர் ஒரு ஊராட்சிமன்ற உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையே உள்ளது. உயர் கல்வி, உயர் பதவிகளில் கற்பனையில் கூட எட்டிப்பிடிக்க முடியாத, ‘ குரலற்றவர்களாக ’ உள்ள இந்த சமூகத்தினருக்கு - சட்டம் வலியுறுத்தும் ’ போதுமான பிரதிநிதித்துவம் ’ (Adequate Representation ) என்ற இலக்கை சென்றடைவதற்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையில் மற்றங்களை கொண்டுவரவேண்டிய அவசியத்தை –இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

குரலற்ற இந்த மக்களின் நியாயமான உரிமைகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வலிமையாக குரல் கொடுத்துப் போராடும் என்று அறிவிக்கிறது.


தீர்மானம்:4

இரு வேறு மதங்களின் பிரிவைச் சார்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான சிறப்பு திருமண பதிவுச் சட்டம் – திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் ஒரு மாத முன்னறிவிப்பு தரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது; திருமணம் செய்துகொள்ள போகும் இணையர்களின் விவரங்களும் முன் கூட்டியே அறிவிப்புப் பலகையில் அறிவிக்கப்படுகிறது . இதன் காரணமாக மதங்கடந்த காதல் திருமணத்தை தடுக்க விரும்பும் சாதி – மதவாத சக்திகள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும், மிரட்டுவதற்கும் வாய்ப்புகள் தரப்படுகின்றன. எனவே ஒரே மதத்திற்குள் திருமணம் புரிவோர் உடனடியாக பதிவு செய்துகொள்வதற்கு உள்ள வாய்ப்புகளை போன்றே, மதம் கடந்து திருமணம் செய்வோருக்கும் அனுமதிக்கும் வகையில் சிறப்புத் திருமண சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.


தீர்மானம்: 5

காதலுக்கு தெய்வீகம் புனிதம் என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் - ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார்.

“ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல் காமம் நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு, பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ - பேசுவதற்கோ நிர்ணியப்பதற்கோ நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது” என்று உறுதிபடக் கூறுகிறார்.

மாறிவரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறையின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கவேண்டாம். என்று பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மனுசாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்துவிட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக்கொண்ட நமது சமூகம், அதே ‘மனுசாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம்:6

தலித் மக்களை தனிமைப்படுத்திட சாதி வெறி கட்சிகளைத் தூண்டிவிடும் இயக்கத்தை முனைப்புடன் நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு எதிராக, சமூக அமைதியைக் காக்கும் நோக்கத்தோடு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளதைப் பாராட்டி வரவேற்பதோடு தமிழகத்தின் ஏனைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்த நல்ல முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 7

பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிடும் போது – பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சார்ந்தோரின் – ஜாதி குறிப்பிடப்படுகிறது; ஆனால் பார்ப்பனர்களை மட்டும் அவர்கள் ஜாதியைக் குறிப்பிடாமல் “பிராமணர்” என்று வர்ணத்தின் பேரால் குறிக்கப்படும் வழக்கத்தை மாற்றி, மற்ற பிரிவினரைக் குறிப்பிடும் முறையிலேயே பதியவேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது..


தீர்மானம்: 8

சாதி தீண்டாமையின் வடிவங்கள் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் வாழ்விடங்கள் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது, இதை மாற்றுவதற்கு அரசு கட்டித்தரும் தலித் மக்களுக்கான குடியிருப்புகள் ஆதிக்க சாதிகள் வாழும் ஊர்ப்பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளாக அரசு கட்டித்தர வேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு கல்வி – வேலை வாய்ப்புகளில் ஜாதியற்றோர் என்ற பிரிவை உருவாக்கி அவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இட ஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது; திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தேனீர் கடைகள், முடிதிருத்தகங்கள், வழிபாட்டிடங்கள் என்பன போன்ற பொது பயன்பாட்டு இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; - போன்ற ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானங்களை திருப்பூரில் 29-4-2012 நடத்திய ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றி, அதனடிப்படையில் அந்த ஜாதி – தீண்டாமைக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பார்ப்பனிய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை அறிவித்தோம்.

இப்போது தலித் மக்களை தனிமைப்படுத்துதல் என்ற செயல்திட்டத்தோடு சாதிய கட்சிகள் வெளிப்படையாக இயக்கங்களை நடத்தி தமிழகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்துகள் உருவாகியுள்ளன. இந்த மனுவாத சாதிய கட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், மனு சாஸ்திர அடிப்படையில் சாதிய – தீண்டாமைக் கொடுமைகள் நிலைப்பதை மாற்றியமைக்கக் கோரியும் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்திடவும், அதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, சாதி – தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணங்களை நடத்திடவும், ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் அந்தந்த மண்டலங்களில் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்துவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் ஜனவரி 22-இல் சென்னையிலும், பிப்ரவரி 9-இல் திண்டுக்கல்லிலும், பிப்ரவரி 16-இல் சேலத்திலும், பிப்ரவரி 23-இல் தஞ்சையிலும், மார்ச் 9-இல் திருநெல்வேலியிலும், மார்ச் 16-இல் கோவையிலும் மார்ச் 23-இல் புதுவையிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி திருச்சியிலும் இந்த மாநாடுகள் நடத்திடவும், நிறைவாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Sunday, November 25, 2012

சாதிவெறி பா.ம.க.வை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்!!

ஒரு காதல் திருமணத்தைக் காரணம் காட்டி தருமபுரி அருகேயுள்ள நத்தம் காலனி, கொட்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்களில் 268 வீடுகளை அடித்து நொறுக்கியும், எரித்தும், தமது ஜாதிவெறியைத் தணித்துக் கொண்டுள்ளனர் அப்பகுதி வன்னியர்கள். பா.ம.க, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னணியாக இருந்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள ஆதிக்க ஜாதியினர் தொண்டர்களை இணைத்துக்கொண்டு இந்த மனிதநேயமற்ற தாக்குதல் நடந்துள்ளது.
ramadoss_330லெட்டர்பேடு கட்சிகள் முதற்கொண்டு, தி.மு.க வரை எல்லா அமைப்புகளும் இத்தாக்குதல் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 17 அன்று பி.பி.சி தமிழ் வானொலியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அவர்களும், வன்னியர் சங்க காடுவெட்டி குருவும் ஒரு நேர்காணலை கொடுத்துள்ளனர். அதன் ஒலி வடிவம் பி.பி.சி தமிழ் இணையதளத்தில் உள்ளது.
குற்ற உணர்வு சிறிதும் இன்றி நடந்த கோரத் தாக்குதலை நியாயப்படுத்தியும், இனிமேல் இதுபோன்ற ஜாதிவெறித் தாக்குதல்கள் நடந்தால் அவையும் நியாயம்தான் என்றும் வெறி பிடித்துப் பேசியுள்ளனர். (http:/www.bbc.co.uktamilmultimedia201211121117_ramadoss.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1) இராமதாஸ் அவர்களின் நேர்காணல் வழியாக அவரது கருத்தாக அறிந்தவற்றைக் குறித்து சிறு விளக்கம் தெரிவிக்க வேண்டியுள்ளது.
“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் சிறு வயதுப் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, நடத்தும் நாடகத் திருமணங்கள் குறைந்துவிடும்”
இதைத்தான் கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவை பொங்கலூர் மணிகண்டன் உட்பட பல்வேறு பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெண்ணின் திருமண வயதை உயர்த்தினால் குறையப் போவது காதல் திருமணங்கள் அல்ல. ஒரே ஜாதிக்குள் தினமும் ஆயிரக்கணக்கில் நடக்கும் திருமண நாடகங்கள் தான்.
“தன் பெண்ணுக்கு ருது காலத்துக்கு (பருவம் எய்தும் காலம்) முன் திருமணம் செய்துகொடுக்காத தந்தை நரகத்திற்குப் போவான்” என மனுசாஸ்திரம் 9 ஆம் அத்தியாயத்தில் 4 வது ஸ்லோகமாகச் சொல்கிறது. இந்த மனுதர்மத்தை எதிர்த்து 1928லேயே இந்திய பாராளுமன்றத்திலேயே விவாதம் நடந்தது. “பால்யவிவாகம் இல்லாவிட்டால் நாட்டில் உண்மையான கற்போ, ஒழுக்கமோ சாத்தியமில்லை” என்று பழம்பெரும் காங்கிரஸ் தலைவன் பார்ப்பன எம்.கே. ஆச்சாரி பாராளுமன்றத்திலேயே பேசினான். தமிழ்நாட்டு பார்ப்பான் சத்தியமூர்த்தி குழந்தைத் திருமணத்தை ஆதரித்து போராடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் 1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெரியார் “பெண்ணின் திருமண வயதை 16 க்கு மேல் என நிர்ணயிக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றினார். நீதிக்கட்சி வழியாக அதைச் சட்டமாக்கினார். தனது குடிஅரசு ஏட்டில் 5 வயதுக்கு உட்பட்ட கைம்பெண்கள், விதவைகளின் எண்ணிக்கையை வெளியிட்டு குழந்தைத் திருமணங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். பெரியாரின் பெரும் போராட்டத்தின் விளைவாகத்தான் பெண்ணின் திருமண வயது 18 என உயர்ந்துள்ளது. டாக்டர் இராமதாஸ் சொல்லும் திருமண வயதுக் காரணம் எவ்வளவு தவறானது என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே ஆதாரமாக உள்ளன. Registrar General and Census Commissioner. (2008). Census of India 2001: Marital Status and Age at Marriage: An Analysis of 2001 Census Data. New Delhi. p. 59 இதில் தரப்பட்டுள்ள தகவல்.
தமிழ்நாட்டில் 15 வயதுக்குள் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2001 ஆண்டு கணக்குப்படி 15,896. இவர்கள் அனைவரும் குழந்தைகள் மட்டுமல்ல; 15 வயதுக்கு முன்பே திருமணம் நடந்து குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். இந்த குரூரத்தைச் செய்தது - இந்த நாடகத் திருமணங்களை நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்பங்களும் தான்.
மேலும் 2007 ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் நடைபெற்ற திருமணங்களில் 24 சதவீத திருமணங்கள் 18 வயதுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏமாற்று ஜாதித்திருமணங்களையும் நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்பங்களும்தான்.
டாக்டர் இராமதாஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், “சுமார் 2000 திருமணங்கள் நாடகத் திருமணங்களாக நடந்துள்ளன; ஆதாரம் இருக்கிறது” என்கிறார். ஆதாரங்களுடன் பட்டியலைத் தரமுடியுமா? நீங்கள் பங்கேற்ற மத்திய அரசு வெளியிட்டிருக்கும் விரிவான புள்ளி விபரங்களையும், ஆய்வுமுடிவுகளையும் நாங்கள் தருகிறோம். எனவே திருமண வயதை 18லிருந்து 21 கூட வேண்டாம் 30 ஆகக்கூட உயர்த்தலாம் நல்லதுதான். பெண்ணின் மண வயதை உயர்த்த, உயர்த்த ஜாதிமறுப்புத் திருமணங்களுக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சியே!
தருமபுரி நத்தம் காலனி இளவரசன் திருமண வயதுக்கு முன்பே வன்னியப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார் என்று குற்றம் சாட்டும் இராமதாஸ் அவர்களே, மத்திய அரசு தரும் புள்ளி விபரங்களின்படி நடந்துமுடிந்த 24 சதவீத திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணங்களை நடத்தி வைத்தவர்களையும் குற்றம் சாட்டத்தயாரா? குறைந்தபட்சம் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களைத் திருமணம் செய்த பா.ம.க வினரை கட்சியிலிருந்து நீக்கத் தயாரா?
சொத்துக்காக இதுபோன்ற சிறுவயதுத் திருமணங்கள் நடக்கிறதாம். சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்த பெண்களுக்கே பெற்றோர் சொத்தில் உரிய உரிமையோ, பங்கோ கிடைப்பதே இல்லை. எண்ணற்ற ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருப்பவர்கள் பெரியார் தொண்டர்கள். அப்படி ஜாதிமறுப்புத் திருமணங்களை நடத்திவைத்து அந்தந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க ஜாதியினரின் தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருபவர்கள் பெரியார் தொண்டர்கள். அதன் அடிப்படையில் நடப்பவற்றைச் சொல்கிறோம். எந்த ஒரு ஜாதி மறுப்பு காதல் திருமணம் நடந்தாலும் பெண்வீட்டுத் தரப்பில் முதலில் தொடர்புகொள்பவர்கள் கேட்கும் ஒரே உறுதிமொழி என்ன தெரியுமா? “சொத்தில் அந்தப் பெண்ணுக்கு பங்குதரமாட்டோம். அந்தப் பெண் பிற்காலத்திலும் சொத்து கேட்கக்கூடாது என்று பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொடுங்கள். அவர்களை விட்டுவிடுகிறோம்” என்பார்கள். அப்படி உறுதிமொழியை எழுதிக் கொடுத்தவுடன் சிக்கல்கள் சரியாகி விடுகின்றன. இது கடந்த 20 வருடங்களாக நடைமுறையில் சந்திக்கும் அனுபவங்கள்.
தலித் ஆண், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண் என்ற திருமணத்தில்தான் இந்தப் பிரச்சனை என்பதும் தவறு. பல சம்பவங்கள் இருப்பினும் ஒரே எடுத்துக்காட்டு. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஒரு தெலுங்குச் செட்டியார் ஆண் – கன்னட செட்டியார் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக அந்த ஊரில் இருந்த தெலுங்குச் செட்டியார்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
anbumani_ramadoss_650
அதுபோல கவுண்டர் என்ற ஜாதிக்குள்ளேயே வேட்டுவ ஆண் - வெள்ளாளப் பெண் என்று நடந்த திருமணம், ஆசாரி ஆண் - காரைக்குடி செட்டியார் பெண், மறவர் ஜாதி ஆண் - வன்னியர் பெண், பறையர் ஆண் - சக்கிலியர் பெண் இப்படி கணக்கிலடங்காத திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறோம். அனைத்து ஜாதியினரின் தாக்குதல்களையும் சந்தித்திருக்கிறோம். அனைத்திலும் சொத்துக்காக அலைந்தவர்கள் பெற்றோர்களும், ஜாதிக்கூட்டமும்தானே தவிர எந்தக் காதலர்களும் அல்ல.
சொந்த ஜாதிக்குள் 18 வயதுக்குள், 15 வயதிற்குள் நடக்கும் நடக்கும் நாடகத் திருமணங்கள் தான் சொத்தைக் குறிவைத்தும், வரதட்சணையைக் குறிவைத்தும் நடக்கிறதே ஒழிய எந்தக் காதலரும் சொத்தை மையமாக வைத்துக் காதலிப்பதில்லை. அதற்கு ஆதாரமான மத்திய அரசின் குற்றப்பிரிவு புள்ளி விபரங்களையே தருகிறோம். தமிழ்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 207. வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தப்படுவதாக பதிவான குற்றங்கள் மட்டும் 262. வரதட்சணைக்காகவும், சொத்துக்காகவும் கணவனாலும், கணவனின் குடும்பத்தாராலும் கொடுமைப்படுத்தப்படுவதாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 1648. வழக்காக வராமல் பல்லாயிரக்கணக்கான வரதட்சணைக் குற்றங்கள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் ஜாதிக்குள் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள்தான். சதவீதக் கணக்குப் பார்த்தால்கூட இப்படிப்பட்ட சிக்கல்கள் 1 சதவீதம்கூட காதல் திருமணங்களில் இல்லை என உறுதியாகக் கூறலாம்.
மிக முக்கியமாக வெட்டுவதையும், அழிப்பதையும் நியாயப்படுத்தி பேசும் சொற்களைக் காண்போம்.
“இவ்வாறு ஒரு பெண் காதல் திருமணம் செய்வதால் அந்தப் பெண்ணின் குடும்பமே அசிங்கப்படுகிறது; ஒதுக்கிவைக்கப்படுகிறது. அப்படி துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது காதல் திருமணம் செய்து போய்விட்ட பெண் கர்ப்பிணியாக, வாழாவெட்டியாகத் திரும்ப வந்தால், அதைப் பார்க்கும் மானமுள்ள ஆம்பிள என்ன செய்வான்? வெட்டுவான், வெட்டுவான்...”
என காடுவெட்டி குருவும், இராமதாஸ் அவர்களும் உறுதியான குரலில் பேசியுள்ளனர்.
2001 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் விவாகரத்து ஆனவர்களின் எண்ணிக்கை 2,49,356. இந்தப் பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டி உயர்ந்திருக்கும். இவற்றில் இராமதாஸ் சொல்வதை உண்மை என்று வாதத்திற்காக வைத்தால்கூட 2000 குடும்பங்களைக் கழித்து விடலாம். மீதமுள்ள இலட்சக்கணக்கான பெண்களின் குடும்பத்தில் மானமுள்ள ஆம்பளைகளே இல்லையா? அப்படி மூன்று இலட்சம் பெண்களை வாழாவெட்டியாக அனுப்பிய ஜாதிமான்களை வெட்டித் தள்ள காடுவெட்டிகுருவோ, டாக்டர் இராமதாசோ தயாரா?
கடந்த 03.10.12 அன்று இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி டி.சி.எஸ். இராஜா சொக்கலிங்கம் அவர்கள் “தினமும் 5 முதல் 10 விவாகரத்து வழக்குகள் தாக்கல் ஆகின்றன” என்றும் “ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும்” தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஏமாற்றுத் திருமணங்களை நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்ப அமைப்பும்தான். அனைத்து ஏமாற்று மணமகன்களையும் வெட்டித்தள்ள இராமதாஸ் தயாரா?  
 இப்படி வெட்டிவிடுவோம், கொளுத்தி விடுவோம் என்று மிரட்டி எந்தக் குடும்பத்தையும் வாழ வைக்க முடியாது. ஏதோ ஒரு இளைஞன் செய்த செயலுக்கு சம்மந்தமில்லாத மற்றவர்களின் வீடுகளைக் கொளுத்துவதை யாரும் ஏற்கமுடியாது. அது பறையர் இளைஞன் ஆனாலும்; வன்னிய இளைஞன் ஆனாலும், சம்மந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களைத் தாக்குவதில் என்ன நேர்மை இருக்கிறது? இருந்தாலும் உங்கள் காட்டுமிராண்டித்தனமான வாதத்தை உங்கள் ஜாதிக்கும் பொருத்திப் பார்க்கலாமா? என்பதற்காகக் கேட்கிறோம்.
பொன்பரப்பியிலும், காடுவெட்டியிலும், திண்டிவனத்திலும் வன்னியரல்லாத மற்ற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்து - நீங்கள் சொல்வது போல கர்ப்பிணியாக்கி - பெண்வீட்டிற்கே திருப்பி அனுப்பிய வன்னிய இளைஞர்களை உங்களுக்குத் தெரியாதா? தெரியாவிட்டால் பட்டியலை நாங்கள் தருகிறோம். அந்த இளைஞர்களின் சொந்த கிராமத்தை - வன்னிய கிராமங்களை - நத்தம் காலனியை எரித்தது போல எரிக்கவும், சூறையாடவும் தயாரா? பிற ஜாதிப் பெண்களை ஏமாற்றி வீட்டுக்கு அனுப்பிய வன்னிய இளைஞர்களை வெட்டுவதற்கு நீங்கள் தயாரா? மாமல்லபுரத்தில் அடுத்த வன்னியர் சங்க விழாவில் இப்படி பேசவாவது தயாரா? வன்னியப் பெண்களுக்கு மட்டும்தான் மானம், எதிர்காலம் எல்லாம் இருக்கிறதா? மற்ற ஜாதிப் பெண்களெல்லாம் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு வாழ்கிறார்களா?
இதுபோன்ற பேச்சுக்களை டாக்டர் இராமதாஸ் கண்டிக்காததே மிகப்பெரும் குற்றம். அப்படியிருக்க, அவரே வெட்டுவேன் என்று நேர்காணல் கொடுக்கிறார் என்றால் உண்மைக் குற்றவாளி காடுவெட்டிகுருகூட அல்ல; டாக்டர் இராமதாஸ்தான். இவர்தான் திராவிடத்தை வீழ்த்தி தமிழ்த் தேசியத்தை மலரச் செய்யப் போகிறாராம். இவர்கள் பேசும் தமிழ்த் தேசியப் புரட்சி என்றால் என்ன என்பதை தர்மபுரியும், பி.பி.சியும் அம்பலப் படுத்திவிட்டன.
ஆக, இதுபோன்ற ஜாதிவெறி பிடித்த தலைவர்களின் நோக்கம், பெண்களின் நிம்மதியான வாழ்வோ, திருமண அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்வதோ, பெண்களின் மானத்தைக் காப்பதோ அல்ல. தேர்தல் அரசியல் - மத்திய அரசு மந்திரிப் பதவி, தமிழ்நாடு முதலமைச்சர் பதவி இவைகளே இவர்களின் பகல்கனவு. அவர்கள் அதை நோக்கி காய் நகர்த்திக் கொண்டிருக்கட்டும். நம்மைப் போன்ற ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர் - சமுதாயத்தை வளர்ச்சி நோக்கில் மாற்ற எண்ணுவோர் - முற்போக்கு இயக்கங்களில் இயங்குவோர் - அரசியல் கட்சிகளில் இயங்குவோர் - எழுத்தாளர்கள் - படைப்பாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் – சமூக செயல்பாட்டாளர்கள் - கலைஞர்கள் அனைவரும் இணைந்தோ, இணையாமலோ - கூட்டமைப்பாக ஒன்றுபட்டோ, தனித்தனியாக இயங்கியோ செய்ய வேண்டிய அவசியமான காரியம் ஒன்று. பா.ம.க வை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் முன் எப்போதும் நடைபெறாத சம்பவங்களில் ஒன்று அண்மையில் மதுரையில் நடந்த தேவர் பந்த். ஜாதி அமைப்புகள் வெளிப்படையாக பந்த் அறிவிப்பதும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவோம் என்று கூச்சலிடுவதும் தமிழ்நாட்டை வடமாநிலங்களுக்கு இணையாகக் காட்டுமிராண்டிக் கூட்டமாக மாற்ற முனைவதாகும். இது போன்ற காட்டுமிராண்டிகாலச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தருவதும், வழிகாட்டுவதும் பா.ம.க ஆகும். எதிர்காலச் சமுதாயம் நாகரீகத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள் ஜாதிக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, ஜாதி வெறியர்கள் அரசியலில் முக்கிய இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் பணியைத் தொடங்குவோம்.
ஆதாரங்கள்:
1. Registrar General and Census Commissioner. (2008). Census of India 2001: Marital Status and Age at Marriage: An Analysis of 2001 Census Data. New Delhi. p. 59
2. International Institute for Population Sciences. (2008). District Level Household and Facility Survey-3: (2007-08): Fact Sheets. Mumbai. p.1.
3. National Centre for Advocacy Studies. (2005). Parliament Digest Monsoon Session 2005: Bridging the Gapbetween Parliament and People: Gender, Agriculture, Natural Resources, Social Development Indicators. NewDelhi. p. 2.
4. International Institute for Population Sciences. (2006). National Family Health Survey – 3: 2005-06. Mumbai. p. 167.

Tuesday, October 23, 2012

பிள்ளையார் சிலை அகற்றம்

 சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, ஊட்டச்சத்துணவு மையம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் பொது மேடை ஒன்றும் உள்ளது. இந்த மேடை பள்ளி மற்றும் அனைத்து பொது விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 22.10.12 அன்று இரவு அப்பகுதியை சேர்ந்த மர்மநபர்களால் பிள்ளையார் சிலை ஒன்று வைத்து பூசை செய்யப்பட்டிருந்நது. இத்தகவலை அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் திரண்டு கண்ணாமூச்சி பஞ்சாயத்து தலைவரை அணுகி இது பஞ்சாயத்துக்கு சொந்தமான அரசு இடம் இதை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் தமிழக அரசாணைப்படி அரசுக்கு சொந்தமான வளாகங்களில், இடங்களில் மதம் சம்மந்தப்பட்ட குறியீடுகள் கோவில்கள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்ற அரசாணையை கொடுத்து பிள்ளையார் சிலையை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அப்படி பிள்ளையார் சிலையை அகற்றாவிட்டால் அரசாணைப்படி நாங்கள் அகற்ற நேரிடும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டது. உடனடியாக பஞ்சாயத்து தலைவர் திரு.கே.கே.பழனிசாமி அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் விவரத்தை கூறினார். உடனடியாக மேட்டூர் காவல்துறை துணைகண்கானிப்பாளர் தலைமையில் கொளத்தூர் ஆய்வாளர், துணை ஆய்வாளர்  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தி பிரச்சணைக்குரிய பிள்ளையார் சிலையை உடனடியாக அகற்றினர். மீண்டும் அந்த பொது மேடை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.






சரஸ்வதி பூஜை என்பது என்ன?

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

—————-ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 20.10.1929 “குடிஅரசு” இதழில் வெளியானது.

Friday, October 19, 2012

என் ஓட்டலுக்கு சாப்பிட வருகிறவர்கள் எனது அடிமைகள் ! இழிமகன்கள் !

ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனர், “பிராமணாள் உணவு விடுதிஎன்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம்  ஒரு பெரும் பகுதி சமுதாயத்தைசூத்திரர்என்று இழிவுபடுத்தும் இந்தபிராமணாள்பெயரை அகற்ற வேண்டும் என்று புகார் தரப்பட்டது. ஆனாலும், ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக ஆணவத்துடன் பேசி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருப்பதால் முதல்வர் பார்ப்பனர் என்ற அடிப்படையில் தமக்கு அரசு அதிகாரத்தின் ஆதரவு இருக்கும் என்ற இறுமாப்பில், ‘பிராமணாள்பெயர்ப் பலகையை அகற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

தேவர்’, ‘நாயுடுஎன்ற பெயரில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதை இந்தப் பார்ப்பனர் சுட்டிக் காட்டுகிறார். இவை சாதிப் பெயர்கள்; இந்தப் பெயர்களுக்கும் தடைப் போட வேண்டும் என்பதே நமது கருத்து. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்களை முழுமையாக அரசு ஆணையின் பேரில் நீக்கப் பட்டதை நினைவுபடுத்துகிறோம்.

ஆனால், ‘பிராமணாள்என்பது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, ‘மனு சாஸ்திரம்கூறும் நான்கு வர்ணப் பிரிவில் மேலானவர்கள்பிரம்மாவால் படைக்கப்பட்ட வர்கள் என்று கூறப்படும்பிராமணர்என்ற பிரிவை அங்கீகரிக்கும் சொல். இந்தப்பெருமையைபிராமணர்கள்கூறிக் கொண்டால், அதனால் மற்றவர்களுக்கு என்ன சங்கடம் என்ற கேள்வி எழக்கூடும். ஒருவன் தன்னைபிராமணன்என்று அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய பெரும் பகுதி உழைக்கும் மக்களைசூத்திரர்கள்என்று அறிவிக்கிறார்கள் என்பதுதான், இதில் அடங்கியுள்ள முக்கியப் பிரச்சினை.

வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள்என்று அரசு, ஒரு புள்ளி விவரம் எடுக்கிறது என்றால், வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி அர்த்தமாகிறதோ அதே போன்றுதான் இதுவும். அரசு கூட மக்கள் தொகையை சாதி வாரியாகக் கணக்கிடுகிறது. அது வேறு. ஆனால், அரசாங்கமேபிராமணர்’, ‘சூத்திரர்என்ற வர்ணத்தின் அடிப்படையில் கணக்கிடுவது இல்லை. காரணம், ‘பிராமணன்’, ‘சூத்திரன்என்ற வர்ண பேதம் பெரும்பான்மை மக்களான சூத்திரர்களைபார்ப்பனர்களின் தேவடியாள் மக்கள்என்று பறைசாற்றுகிறது.

மனு சாஸ்திரம்என்ன கூறுகிறது? “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் (செயல்களை) தனித்தனியாகப் பகுத்தார். (அத்தியாயம் 1; சுலோகம் 85)

பிராமனன் முதல் வர்ணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு. அத்தியாயம் 1 - சுலோகம் 100)

மனு தர்ம அடிப்படையில், ‘பிராமணாள் கபேஎன்று ஒரு ஓட்டலுக்கு பெயர் சூட்டப்படுகிறது என்றால், அதன் பொருள் - ஓட்டல் நடத்தும் அந்த உரிமையாளன், ‘நான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன். இந்த ஓட்டலுக்கு வந்து காசு கொடுத்து சாப்பிட்டாலும் பிராமணரல்லாதவர்கள் என்றால், அவர்கள், எனது பார்வையில்சூத்திரர்கள் எனது அடிமைகள். மனுதர்மத்தின் 18வது அத்தியாயம் 122வது சுலோகத்தின்படி என்னுடைய ஓட்டலுக்கு காசு கொடுத்து சாப்பிட வரும் சூத்திரர்கள், நான் ஏற்றுள்ள தர்மப்படி என்னை வணங்க வேண்டியவர்கள். அதே சுலோகத்தின்படி எனது ஓட்டலுக்கு சாப்பிட வருவதே அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
நான்பிராமணரல்லாதகீழ் வர்ணக்காரர்களான சூத்திரர்களை மனுதர்மம் அத்தியாம் 8 - சுலோகம் 122-ன்படி கீழ்க்கண்டவாறுஅறிவிக்கிறேன்.

போரில் புறமுதுகிட்டு ஓடிவந்த கோழை.
இவன் என்னிடம் பக்தி கொண்டு தொண்டு செய்ய வேண்டியவன்.
இவன் எனது விபச்சாரியின் மகன்.
இவன் என்னால் விலைக்கு வாங்கப்பட்டவன்.
இவன் தலை தலைமுறையாக எனது அடிமையாக இருந்து வருகிறவன்.

இதைத்தான் திருவரங்கத்தில் ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனது விளம்பரப் பலகையில் பொறித்து வைத்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக வசதிக்காக நடத்தப்படுகிற ஒரு வர்த்தக நிறுவனம் தன்னிடம் வாடிக்கையாளர்களாக சாப்பிட வருகிற பெரும்பான்மை மக்களையும் சமுதாயத்தில் உழைக்கும் பெரும்பான்மை மக்களையும்
, தேவடியாள் மகனே!
, அடிமையே!
, புறமுதுகிட்டு ஓடிய கோழையே!
, என்னை அண்டி வாழக்கூடிய இழிப் பிறவியே!
வா, வா, வந்து காசு கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போ என்று பகிரங்கமாக அறைகூவல் விடுப்பதை பக்தித் தமிழர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா..கவிலுள்ள பார்ப்பனரல்லாத தமிழர்களே, இந்த கீழ்மையை சிறுமையை அவமானத்தை அங்கீகரிக்கிறீர்களா?
இது நாத்திக-ஆத்திகப் பிரச்சினையல்ல;
இது இந்துமத எதிர்ப்புப் பிரச்சினையுமல்ல;
நீ, மானமுள்ள, சூடு, சொரணையுள்ள மனிதனாக இருக்கிறாயா என்பதை சோதனைக்குள்ளாக்கும் பிரச்சினை!
ஆமாம், நான்சூத்திரன்என்று பச்சை குத்திக் கொள்ளப் போகிறீர்களா?
மானமுள்ள மனிதன் என்று போர்க்கொடி உயர்த்தப் போகிறீர்களா?

Friday, October 5, 2012

அறிவுக்குப் பொருந்தாத ஆபாசப் பண்டிகை சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜையைப் புறக்கணிப்போம்!

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை)

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசைகல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர்  கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து  கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள்  படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்என்று சொல்லிக் கொண்டு இருக்கின் றார்கள்.
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க  ஆபாசமானதாகும்.  
அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே  மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே  பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன்  வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக  மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.

இரண்டாவது,

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறதுஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது  வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று  சொல்லப்படுகிறதுஅதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தி யாகிறாள்எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம்.
அதாவதுசரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டுசரஸ்வதி பூசை, ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.
இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங் களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங் களையும் , தராசு, படிக்கல், அளவு மரக் கால், படி , உழக்குபெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள்  புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை களையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத்  தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங் களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச்  செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.
சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக் குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு  எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.  
அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து  விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ  சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள்
அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பை களையும் அள்ளி  அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை  செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்குபேர்கள் என்று தான் உள்ளார்கள்.
இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும்  அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள்                1,000 த் துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம்  செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா?  
அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது  சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையாஎன்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்க வேண்டும்.
இவையாவும் சுத்த  முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம்அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற  பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்குக் கல்வி இல்லை.   
ஆனால் வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும்  வருகிறான்ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை  செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம்வியா பார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால்அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாதுசரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து ``முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டு மிராண்டிகள்என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும்வியாபாரிகள் அரசாட்சி யுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்இந்தப் பூசையின் மூலம் நமது  முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்
இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம்  செலவு செய்வது, அறிவுச்செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடைமேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர் களுக்குத் தட்சணை, சமாராதனை , ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவா கின்றன என்பதை  எண்ணிப் பாருங்கள்
இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்தேசத்தின் செல்வமல்லவாஎன்று கேட்கிறேன்ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில்  செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால் , மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு  என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும்இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை