Wednesday, November 25, 2009

மாவீரர் நாள் நவம்பர் -27 -2009

உலகமெல்லாம் தமிழினத்தை அறியச்செய்து அடையாளப்படுத்தி பழந்தமிழ்ச்சங்க இலக்கியங்கள் கூறும் வீர வரலாறுகளை நிலைநிறுத்தி சுதந்திரமான வாழ்வுக்காக யாரும் செய்யமுடியாத எண்ணற்ற உயிர்கொடைகளை வழங்கியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆவர் .

ஈழமண்ணில் நடந்த விடுதைலைப்போரில் இதுவரை வீரமரணம் அடிடைந்து வரலாறாகியுள்ள மாவீரர்களின் நினைவு நாள் நவம்பர் -27.1982 ல் சங்கர் என்கிற சத்தியநாதன் முதல் விடுதலை வீர விதையாக அந்த நாள் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த நாள் தமிழர்களின் வரலாற்றில் பதிவுசெய்து தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய நாள் ஆகும்.

தமிழர்களே இந்நாளில் ஈழத்தில் நம் உறவுகள் முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். இந்தியாவின் தமிழ் இன எதிரிகளும், தமிழ்நாட்டில் தமிழின துரோகிகளும் சிங்களவனின் பாதணிக்கு கூட மெருகூட்டும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன மானமுள்ள மக்களே ! நம் தமிழினத்தின் மான வாழ்வுக்காகவும் , விடுதலைக்காகவும் போராடி களத்தில் வீரமரணம் எய்திய மாவீரர்கள் நம் உறவுகள் அல்லவா? உலகையே வியப்பில் ஆழ்த்தி தமிழன் யார் என அடையாளப்படுத்தியவர்கள் அல்லவா? அவர்களை மரியாதை செய்யும் நாளில் விடுதலைப் போரில் தம்முயிர் ஈத்த அம் மாவீரர்கள் நம் தொப்புள்கொடி உறவுகளே என்ற உணர்வோடு நவம்பர் -27 , மாலை 6.06 க்கு மெழுகுவர்த்தி ஏந்தியோ- மௌனமாய் நின்றோ கடைகளிலோ, வீதியிலோ, வீட்டிலோ எங்கிருந்தாலும் ஒரு நிமிடம் வீரவணக்கம் செலுத்துவோம்.

இவன் ,
பெரியார் திராவிடர் கழகம்


No comments: