
ஒவ்வொரு விழாக்காலங்களிலும் தகுந்த துண்டரிக்கை விநியோகித்து பெரியாரிலை மக்களிடையே பரப்பியவர்.சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் அதிகரித்த காலங்களில் தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். 25.11.10 காலை 10.00 மணியளவில் எவ்வித சடங்கும் சம்பிரதாயமும் இன்றி இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
கழக தோழர்கள் வீரவணக்கம் வீரவணக்கம் எங்கள் தோழர் செழியனுக்கு வீரவணக்கம் என முழங்க உடல் எரியூட்டப்பட்டது, மதியம் 1.00 மணிக்கு மறைந்த தோழரின் படத்தை அவரின் அத்தை திறந்து வைக்க தோழர்கள் முல்லைவேந்தன், டைகர் பாலன், செல்வேந்திரன், நங்கவள்ளி அன்பு, மேட்டூர் பாலு ஆகியோர் இரங்கள் உரையாற்றினர்.
No comments:
Post a Comment