Thursday, April 7, 2011

பினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு சுடுகாட்டில் இரண்டு தகன மேடைகள் [பினம் எரிக்கும் மேடை] கட்டப்பட்டுள்ளது.

இறந்தபின்பு பினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது என்பதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மற்றொன்றுமாக அருகருகே கட்டப்பட்டுள்ளது. இரண்டிற்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டர் ஜாதியை சார்ந்தவர்கள் அதிகமாக வாழும் இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு, தாழ்த்தப்பட்டவர் மட்டுமே போட்டியிடமுடியும் என்பதால், இங்கு தாழ்த்தப்பட்ட ஒருவரே ஊராட்சி தலைவராக இருந்தும் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.
சுடுகாட்டின் அருகில் இருக்கும் பெயர் பலகை

ஒரு சுடுகாட்டில் இரண்டு தகன மேடைகள்




தாழ்த்தப்பட்டவர் பினத்தை எரிக்கும் இடம்
பிற்படுத்தப்பட்டவர் பினத்தை எரிக்கும் இடம்

No comments: