குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து,குடும்பம் பெருத்து விட்டதாம்,அதனால் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் திண்டாடினாராம்..
குசேலரின் பெண்ஜாதி வருசத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும், கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாகும் போது, மூத்த பிள்ளைக்கு 27 வருசம் ஆகி இருக்க வேண்டும்..
ஆகவே,
20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேர் இருந்திருப்பார்கள்..
இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளா??
20 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சை எடுக்கப் போக குசேலருக்கு வெட்கமாக இருந்திருக்காதா??
அல்லது இந்த 7 பிள்ளைகளுக்காவது மான அவமானம் இருந்திருக்காதா??
அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, தடிப்பயல்களை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறாயே, வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா???
--பகுத்தறிவு இதழில், 1935 ல் பெரியார்
No comments:
Post a Comment