Friday, June 26, 2009

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,மற்றும் தமிழுணர்வாளர்களை கைது செய்ததை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்

பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், பெரம்பலூர் மாவட்ட பெரியார்திராவிடர் கழக செயலாளர் இரா.இலட்சுமணன், ம.தி.மு.க கோவை மாவட்ட மாணவரணிச்செயலாளர் புதூர்சந்திரசேகர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்த தமிழக அரசைக்கண்டித்தும், தமிழுணர்வாளர்களை விடுதலைசெய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் 26-06-2009 வெள்ளிக் கிழமை மாலை 4.00மணிக்கு சேலம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர்மார்ட்டின் தலைமை தாங்கினார். ஈழ தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசால் சிங்கள ராணுவத்திற்கு வழங்கு வதற்குக்காக ஆயுதுங்கள் ஏற்றி சென்ற லாரிகளை கோவையில் பொதுமக்கள்ஆதரவோடு தடுத்து நிறுத்தி போராடிய பெரியார் திராவிடர் கழகப் பொதுசெயலாளர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்களை தேசிய பாதுகப்பு சட்டத்தில்கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் கோகுல கண்ணன் மற்றும் ஆத்தூர் சண்முகம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் , சேலம் காமராசு ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள் .
நன்றியுரை தோழர் டேவிட் கூறினார் 100 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கழந்து கொண்டனர்.























































No comments: