Saturday, March 21, 2009

தேசிய பாதுகாப்பு சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்கு பயன்படுத்தாதே

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், ம.தி.மு.க. கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதை கண்டித்தும், 3 பேரையும் விடுவிக்க கோரியும் நேற்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

16.03.09 காலை 11.00 மணிக்கு சேலம் போஸ் மைதானத்தில் கழக சார்பில் மாவட்ட தலைவர் மார்ட்டீன் தலைமையில் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கழக தோழர்கள், ஆதரவு அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்கு பயன்படத்தாதே, நசுக்காதே நசுக்காதே கருத்துரிமையை நசுக்காதே,தேசிய பாதுகாப்பு சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்கு பயன்படத்தாதே திரும்பபெரு போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், சட்டக்கல்லுரி மாணவர்கள், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி , தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட ஆதரவு அமைப்புகள் கலந்துகொண்டன.

கோவையில் ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி , விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சுசிகலையரசன், ம.தி.மு.க. சார்பில் சேதுபதி, ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் மு.கிருஷ்ணசாமி, திலக்கபாபு, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ரவிக்குமார், தலித் விடுதலை கட்சியை சேர்ந்த எம்.பி.செங்கோட்டையன், நிலவேந்தன் மற்றும் தேவேந்திரன், வக்கீல் காந்தி, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கு.இராமகிருட்டிணன் கூறும்போது, பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை காப்பாற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய இந்த நேரத்தில், 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தததை கண்டிக்கிறோம். காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பேசக்கூடாது என்பதற்காகவும், வாய்ப்பூட்டு போடவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். இந்த விடயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கு.இராமகிருட்டிணன் கூறினார்.




திண்டுக்கல்லில் மாலை 4.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.சம்பத் தலைமையில் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் க.சூ.இரவணா, ம.தி.மு.க மாவட்டச்செயலாளர் செல்வராகவன், விடுதலைச்சிறுத்தைகள் நகரச்செயலாளர் அன்பரசு, திருச்சித்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் பேட்ரிக் சகாயராஜ், அருட்திரு பிலிப் சுதாகர், தமிழர் தேசிய இயக்க மாநிலத் துணைத்தலைவர் கு.செ.வீரப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி பாண்டியன், சி.பி.ஐ.( எம்.எல்) மாவட்டச்செயலாளர் ஆபிரகாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெ.தி.க நகரத் தலைவர் துரை.சுப்பிரமணி நன்றி கூறினார்.
பெரியார் நம்பி, பழனி நல்லதம்பி, திருச்செல்வம், முருகன், குணா, செம்பட்டி ஆல்பர்ட், பாரத், கிருட்டிணமுர்த்தி உட்பட பல தோழர்களும் கலந்துகொண்டனர்.
இதே போல் திருப்பூர் , சேலம் , ஈரோடு மற்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.





No comments: