Sunday, April 26, 2009

துரோக காங்கிரசை கண்டித்து நங்கவள்ளி பெரியார் தி.க ஆர்ப்பாட்டம்

26.04.2009 காலை 11.00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சேலம் நங்கவள்ளியில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தோழர் டைகர் பாலன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து , சிங்கள இராணுவத்துக்கு இன்றளவும் உதவி வரும் இந்திய துரோக காங்கிரசை கண்டித்து. இந்தியாவின் தொடர் உதவிக்கு இலங்கை மக்களின் நன்றி தெரிவித்த சரத்பொன்சேகாவின் பேட்டியை கண்டும் மத்திய அரசுக்கு இலங்கை போர் நிறுத்த நடவடிக்கைக்கு முழு அளவில் அழுத்தம் தராத தமிழக கருணாநிதி அரசைக் கண்டித்து, விடுதலை புலிகளின் மீதானதடையை நீக்க கோரி , இனியாவது எம் மக்களின் படுகொலையை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க கோரி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழின துரோக காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டாமென முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டைகர் பாலன் , நங்கவள்ளி அன்பு, கோகுலகண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.80 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள் தோழர் கோபால் நன்றியுரை கூரினார்.
ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் பூண்டோடு அழிக்கப்படுவது கண்டு அங்கு போர் நிறுத்தத்தை கொண்டுவா என்று பொங்கி எழுந்தோமே நாம் . எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை மறியல்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை எத்தனை தீக்குளிப்புகள், அத்தனை நடந்தும் நம்மை யார் மதித்தார்கள்? நம் குரலை யார் கேட்டார்கள்?
தமிழ் உறவுகளே ! நாம் 6.5 கோடி தமிழர்கள் இருந்தும் தட்டிக்கேட்க நாதியற்ற இனமாய் ஈழதமிழினம் பூண்டோடு சிதைவதை பார்த்தீர்களா? நம் போராட்டங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காய், சிங்கள, பேரினவாதத்துக்கு ஆயுதம் வழங்கி அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முற்றும் முழுதாக உதாசீன படுத்திவிட்ட நிலையில் இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? தொடர்ந்து நம் வெற்றுக்கைகளால் அடிவயிற்றில் அடித்துக்கொண்டு அழப்போகிறோம்? பிறகு, என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி வரும். ஆயுதம் இருக்கு அது வாக்குச்சீட்டு எனும் வறலாற்றையே திருப்பும் ஒற்றைப் பேராயுதம் அவ்வாயுதம் கொண்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், நம் மண்ணில் காங்கிரஸ் எனும் துரோக கட்சியே இல்லாமல் ஒழித்துக்கட்டுவோம். அவர்களின் தோள் மீது கை போட்டு வரும் துரோகிகளையும், நம் இனத்தின் விடுதலையை எதிர்க்கும் விரோதிகளையும், நம் மண்ணில் இருந்து தூர தூர துரத்தியடிப்போம் . தமிழ் வாழ, நம் தமிழ் இனம் வாழ “மை” தொடும் நம்முடைய விரலில் தான் இருக்கிறது எல்லாம் .......
பாசமுள்ள தமிழ் உறவுகளே அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும், பிள்ளைகளும் ஈழத்தில் உயிராயுதம் ஏந்தியிருக்கிரார்கள்.
இங்கு உங்கள் நன்பர்களிடமும், உறவினர்களிடமும் துரோக காங்கிரஸை தோற்க்கடிக்க ஆதரவு திரட்டுங்கள். அதுவே நம் இனதிற்கு நாம் செய்யும் பேருதவி
















No comments: