Monday, April 27, 2009

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவிரதம்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், இலங்கை அரசு அதனை ஏற்காமல், தாக்குதல் நடத்தி வருவது எனக்கு மிகுந்த வருத்தை அளிக்கிறது. தமிழக மக்கள் சார்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்க உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.
இரவு முழுவதும் கண் விழித்து போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்தும் போர் நிறுத்தம் வராததால் தன்னை அர்பணிக்க தமிழர்களுக்காக உண்ணாவிரம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

No comments: