Tuesday, May 5, 2009

கொளத்தூர் மணிக்கு உற்சாக வரவேற்பு

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மே 4 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் மதுரை சிறையிலிருந்து 62 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு, விடுதலையான போது சிறை வாசலில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.



கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி கொளத்தூர் மணி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திண்டுக்கல் கூட்டத்தில் ஆற்றிய உரைக்காக கைது செய்யப் பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, திண்டுக்கல் காவல்துறை பதிவு செய்த வழக்கில் பிணை கிடைப்பது ஒரு வாரம் தாமதப்படுத்தப் பட்டது.



சிறைவாசலில் பட்டாசு வெடிக்கப்பட்டு, வாடிப்பட்டி மேளத்தின் முரசம் முழங்க, பெரியார் திராவிடர் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை, மேட்டூர், சேலம், உடுமலை, பொள்ளாச்சி, கோவை, குடந்தை, திருப்பூர், காங்கேயம், தூத்துக் குடி பகுதிகளிலிருந்து தோழர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.



சிறைவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய கழகத் தலைவர் காங்கிரசு கட்சியை தமிழர்கள் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரவு திண்டுக்கல்லில் தங்கி, காலை மேட்டூர் நோக்கி பயணமானார். சேலத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. சேலத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்து விட்டு, மேட்டூர் நோக்கி சென்றார். வழி நெடுக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.






No comments: