Wednesday, May 6, 2009

இராயப்பேட்டையில் நடந்தது என்ன?

ஈழத் தமிழர் பிரச்சினையை பேசியதற்காக கழகத்தினர் மீது தாக்குதல்; பொய் வழக்கு
தயாநிதிமாறன் போட்டி யிடும் மத்திய சென்னை தொகுதி யில் ஈழத் தமிழர் இனப்படு கொலையை முன்னிறுத்திப் பேசிய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறையும், தயாநிதி மாறன் ஆட்களும் இணைந்து தாக்கியதோடு கழகத் தோழர்கள் மீதே பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய சென்னை நாடாளு மன்ற தொகுதியில் பெரியார் திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து செய்து வரும் தேர்தல் பிரச் சாரத்தை தி.மு.க.வினர் காவல் துறையுடன் இணைந்து அடக்கு முறையால் முடக்கி வரு கிறார்கள். கடந்த 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வேன் வழியாக பிரச்சாரம் செய்தபோது பாதி வழியில் நிறுத்தி ஈழத் தமிழர் பிரச்சினையை பேச அனுமதிக்க முடியாது என்று கூறி வேனை பறிமுதல் செய்ததோடு 5 பேர் மீது தேச துரோக வழக்கு தொடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீண்டும் 02.05.09 அன்று கழகத்தினர் பிரச்சாரத்தை நடத்தியதால் தி.மு.க வினர் இரவு 10 மணி அளவில் காவல் துறையினருடன் வந்து ‘பெரியார் படிப்பகத்தை’ அடித்து நொறுக்கி அருகில் இருந்த பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர், தாக்குதலில் மூன்று பேர் படுகாயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இரவு முழுவதும் வி.எம். சாலையில் பொது மக்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல் துறை இழிவாக நடத்தியுள்ளது.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ததற்கு பதிலாக தாக்கு தலுக்கு உள்ளான பெரியார் திராவிடர் கழகத்தினர் மீதே தி.மு.க.வினரையும், காவல்துறை யினரையும், தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் தாக்கியதாக பொய் வழக்கு போட்டு மீண்டும் 5 பேரை கைது செய்து பிணை யில் வர இயலாத பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் அடைந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்கள். கழக குடும் பத்தைச் சேர்ந்த சுதா, வயது 35, தமிழ்ச்செல்வி வயது 25 ஆகிய தமிழ்ச் செல்வியின் ஒரு வயது கை குழந்தையை உடன் கொண்டு செல்ல காவல் துறை அனுமதிக்க வில்லை.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான எந்த பிரச்சாரமும் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, பெரியார் தி.க.வினர்மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் காவல்துறை தி.மு.க.வினர் ஆதரவோடு வன்முறையை கட்டவிழ்த்து உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பெரியார் தி.க.வினரை கைது செய்து பெரியார் தி.க. வினரின் பணியை முடக்கிவிட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கருத்துரிமைக்கு எதிரான இந்த ஒடுக்குமுறையை கண்டிக்க தமிழ் இன உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் முன் வருமாறு கேட்டுக் கொள் கிறோம்.

No comments: