Wednesday, May 6, 2009

இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:உலக அளவில் மனித உரிமைகளுக்கான காவலனாக தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ள சில மேலை நாடுகளிடம் இருந்து போர் நிறுத்தம், பொது மன்னிப்பு போன்ற வெட்கங்கெட்ட கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வரும் மூன்றாவது ஏழை உலக நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றன.ஆனால், இலங்கையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதில் இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது. அதுபோல சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான், லிபியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கை அரசை ஆதரிக்கின்றன. அந்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது.இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : ‘தினத்தந்தி’ 4.5.2009

No comments: